வெள்ளி, 6 ஏப்ரல், 2018

இலைகளே உன்னைப்பார்த்துக்கொண்டிருக்கட்டும்.


இலைகளே உன்னைப்பார்த்துக்கொண்டிருக்கட்டும்.
=========================================================ருத்ரா

எத்தனை தடவை
அந்த அடர்த்தியான
இலைசன்னல்களிடையே
வந்து
எங்களை எட்டிப்பார்த்திருப்பாய்?
இன்னும் நாங்கள்
தார் பூசிய  முகங்களில் தான்
மேக்  அப் செய்து கொண்டிருக்கிறோம்.
சாதிகள் மதங்கள்
செய்த இருட்டடிப்பில்
உனக்கு வெற்று "கும்ப மேளாக்கள்" நடத்தி
எங்கள் அசுத்தங்களைக்கொண்டு
உன்னை நீராட்டும் வேடங்கள்
புனைந்து கொண்டிருக்கிறோம்.
இந்த அஞ்ஞான பூமி போதும்.
எங்கள் அறிவு விழிகள் திறக்கும் வரை
இந்த போதையே சுகம்.
அந்த இலைகளே
உன்னைப்பார்த்துக்கொண்டிருக்கட்டும்.

===================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக