சனி, 28 ஏப்ரல், 2018

மெர்க்குரி


மெர்க்குரி
=========================================ருத்ரா

கமலஹாசனின் பேசும்படம்
பேசாத ஊமைப்படம் போல் வந்தது.
அதிலும் த்ரில் இருந்தது.
கூடவே நகைச்சுவையும் மெர்க்குரி
நகர்ந்து நகர்ந்து வந்தது.
அதிலும் "அனந்து"வின் அந்த
"ஐஸ் கத்தி" அபாரமாய் நடித்தது.

மெர்க்குரியில்
அந்த நாய்ச்சங்கிலியும்
அதில் இழுத்துவரப்படும்
பிரபு தேவாவும் தான்
படம் முழுதும்
நம் நரம்புகளில் "ஐஸ் அக்கினியை"
நிரப்பி நம்மை
துகள் துகளாக சிதறடிக்கின்றனர்.

அந்த ஐந்து நண்பர்களும்
பிரபு தேவாவின்
ஐந்து வித திகில் கோணங்களில்
அரண்டு விடும்போது
மொத்தக்கதையும் படமும்
கார்த்திக் சுப்பராஜை
மிக உயரத்துக்கு
கொண்டுபோய் விட்டது.
ஆல் ஃ ப்ரெட் ஹிட்ச்காக்
திரைப்படத்தில்
இப்படித்தான்
நம் ரத்தத்தை உறையவைக்க
ஒவ்வொரு மூலை முடுக்கிலும்
ஒரு காட்சியை செருகி வைத்திருப்பார்.
எதிர்பாராத அந்தக்கணம்
தியேட்டர் முழுவதும் "திடுக்"
என்று குலுங்கி விடும்.
மெர்க்குரி படம்
நிச்சயம் நம் திரைப்படப்பாதையில்
ஒரு புதிய மைல் கல்.
"பிரபு தேவாவின் நடிப்பு சூப்பர்ர்ர்ர் "
சூப்பர்ஸ்டாரே சொல்லிவிட்டாரே .
மொத்தமாய் அவர் மீது
விருது மழை பெய்தது போல்.
அது உண்மையே தான்.
ஏற்கனவே காதலன் படத்தில் அந்த
"முக்காபுலா"பாட்டுக்கு
ஏ ஆர் ரஹ்மான் இசைக்கு
தன்  உடம்பை
பார்ட் பார்ட்டாக கழற்றி வீசுவார்
அப்புறம்
ரம்மி சீட்டு போல செட் சேர்த்து விடுவார்.
இதில்
படம் முழுதும்
பயம் "பாதரசம்"போல்
சொட்டு சொட்டாய் ஒழுகி
அப்புறம் அடர்த்திக்கடலாய்
நம்மை அமுக்கி விடுகிறது.
அவர் நடிப்பும் அப்படியே
ஒரு "லிக்குடிட்டி"யை விரவி
கலவரப்படுத்துகிறது.
பயத்தையே கவிதை ஆக்கிய
ஒரு "பயோ"ஸ்கோப் இந்த
மெர்க்குரி எனும் பயாஸ்கோப்.

=============================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக