வியாழன், 5 ஏப்ரல், 2018

"நாதி"

நன்றி புகைப்படம்  from EM Joseph


"நாதி"
================================ருத்ரா இ பரமசிவன்

இது பெயர் அல்ல.
ஒரு புன்னகையின் கிரீடம்.
மண் 
அவரை அழைத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால்
அந்த சிரிப்பின்
"திருவாய்மொழி"
அந்த தீயையே
திகு திகு என்று எரித்து
சிரித்துக்கொண்டிருக்கிறதே.
மனிதமை
என்ற சொல் 
அடித்துத்திருத்தப்பட்டது
அவரால்
தோழமை என்று!
"அமுதுக்கும் தமிழ் என்று பேர்"
என்று முழங்கிய 
கனல் முரசின் கலப்படம் இல்லாத‌
உண்மை
கணீர் கணீர் என்று
நம் முன் 
ஒலி எழுப்பிக்கொண்டிருக்கிறது.

============================================

"நாதி" என்று அழைக்கப்படும் திரு.நா.திருமலை எனும் 
எங்கள் அன்புத்தோழர் மறைவு குறித்த இரங்கற்பா.இது.

============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக