சனி, 28 ஏப்ரல், 2018

"நான் யார்?"

"நான் யார்?"
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=================================ருத்ரா

திருவண்ணாமலை
பாறையிடுக்குகளில்
பள்ளி கொண்ட முனிவர்
ரமணர்.
மனத்தின் படர்ந்த வெளியில்
மேய்ந்தவர்.
ஒரு தூசு கூட‌
இந்த மேனியில்
கோடிக்கணக்கான
டன் எடையுள்ள பாறை தான்
அவருக்கு!
அந்த உறுத்தலில்
அவருள் முளைவிட்ட கேள்வி தான்
"நான் யார்?"
அவர் நினைத்தார்
இந்த பிரபஞ்சத்தையே கூட‌
மூடி மறைக்க
ஒரு கோவணம் போதும் என்று?
அது தான்
அந்த "நான் யார்?" என்ற கேள்வி.
ஒரு சமணத்துறவிக்கு
அதுவும் தேவையில்லை.
கேள்வியே கேட்கவேண்டாம்.
வெட்கம் எதற்கு?
ஆசை எதற்கு?
வேதனை எதற்கு?
பிரபஞ்சம் தன்னையே
மூளியாய்
உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பதே
பிரம்ம நிர்வாணம்.
ஆன்மீகம்
என்பதும்
இப்படி கண்ணாடியை
சில்லு சில்லாய் நொறுக்கி
ஒவ்வொன்றிலும்
தன் பிம்பத்தையே
பார்த்துக்கொண்டிருப்பது தான்.
இந்த இதயத்துள்
வெண்டிரிக்கிள் ஆரிக்கிள்
அறைகள் மட்டுமே
உண்டு.
அதனுள் ரத்தம் ஆடும்
நர்த்தனமே ஆன்மீகம்.
அது தான்
இந்த உலக்மே உறையும் இடம்.
அதில்
சூலங்கள் இல்லை.
சிலுவைகள் இல்லை.
பிறைகளும் இல்லை.
மலைகளை
கற்பாளங்களாக‌
வெட்டி வெட்டித்
தின்னும் ஆசைகள் இல்லை.
ஆற்றைச்சுரண்டி
மணலும் நீரும்
கொள்ளையடிக்கப்படவேண்டும்
என்ற பணவெறி இல்லை.
என் மதம் உன் மதம்
என்ற கொலைகள் இல்லை.
மனித வர்ணங்கள் இல்லை.
இந்தப்பூவை
கோடரி கொண்டா பறிப்பது?
ஆன்மீகம்
மானிடப்பூ என்றால்
அரசியல் எனும்
கோடரிக்கு
அங்கு வேலையே இல்லை.
அப்படியென்றால்
ஆன்மீக அரசியல் என்பது
யாரோ
யாரையோ
ஏமாற்றுவது தான்.
அந்த "நான் யார்?"
அதற்கு எதிரே உட்கார்ந்திருக்கும்
அந்த "நீ யார்?"

ஓட்டு வைத்திருப்பவனே.
நன்றாய் உணர்ந்து கொள்
அந்த இரண்டுமே
அந்த கணினிப்பொறியின்
"பட்டன்" தான்!

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக