ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

"கேணி"

"கேணி"
=========================================ருத்ரா

இப்படி ஒரு படம்
நம் மூக்கின் முனையிலேயே
கொட்டும் குளவி போல்
காவிரியை
பிரிச்சு மேஞ்சு தான் இருக்கிறது.

கோர்ட்டு தீர்ப்பு எல்லாமே
செப்பு விளையாட்டு போல்
ஆக்கி
நம் தண்ணீர் பிரச்னையை
கேலிக்கூத்து ஆக்கும்
பொம்மலாட்ட அரசியலின்
ஒரு அழிவு நெருப்பு
பிஞ்சு விட்டிருக்கும் படம் தான் இது.

ஒரு எல்லையோரக் கிணறு
ஒரு தமிழ் நாட்டு கிராமத்துக்கு
உயிர் ஆதாரமாக இருக்கக்கூடாது
என்று ஒரு வேதாளமாகவும்
அந்த தடையின் முரட்டுக்கையை
வெட்டிவீழ்த்தும்
ஒரு விக்கிரமாதித்த ஆவேசமாகவும்
படம்
அனக்கோண்டா கிராஃபிக் பாம்புபோல்
முறுக்கி முறுக்கி
நம் பிரச்னையின் கண்ணாடி பிம்பத்தை
நன்றாக காட்டுகிறது.

லவ்வு லவ்வு என்று
எத்தனை நாளைக்குத்தான்
மாரடித்துக்கொண்டிருப்பது?
தமிழனின் ஆவேசம் என்றாவது
ஒரு நாள்
எரிமலை லாவா ஆகவேண்டாமா
என்று
இயக்குனர் திரு எம்.ஏ நிஷாத்
கனவு கண்டு
செதுக்கிய படம் தான் இது.
நேரடியாக
நம் காவிரி தாகத்தின் வெப்பத்தை
காட்டாமல்
வேறு கதைஅமைப்பில்
பரபரப்பு காட்டி
அந்த அக்கினிக்குஞ்சின்
தீம் திரிகிட தீம் திரிகிட‌
அடி நாதத்தை
மறைந்திருந்து கோபம் காட்டும்
பாரதியின் முறுக்கு மீசையை
நிழல் ஆக்கிய‌
நேர்த்திக்கு இயக்குநருக்கு
ஒரு தனி முத்திரை.

பார்த்திபன்
ஜெயபிரதா
ரேவதி
ரேகா
நாசர்
என்று
வழக்கமாய் சொல்லும்
நட்சத்திர பட்டாளம்
என்ற சொற்றொடரை இங்கே
வீசுவது முறையாகாது.

தமிழனின் கனல்கின்ற கண்களும்
துளிர்க்கின்ற கண்ணீரும்
கந்தல் குரல்களின் கணீர் தெறிப்புகளும்
அவனின் தொல்லிய மாண்பின்
ஏக்க வடிவ வீச்சுகளும்
இவர்களிடம்
அலைகளாக‌
அலைகளின் நுரைகளாக‌
படரச்செய்து இருக்கிறார்கள்.
தமிழ் எனும் குடும்பம்
உணர்வு நரம்புகளில்
யாழ் மீட்டியிருக்கிறது.

ஓகோ!
இப்படியெல்லாம் படம் எடுப்பீர்களா?
மூச்!
உங்களுக்கு விருது கிடையாது என்று
மேலிடம் கோபத்தை
குமிழியிடுமானால்
அதுவே இந்த படத்துக்கு
ஒரு சிறந்த விருது!

================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக