செவ்வாய், 25 ஏப்ரல், 2017

"சப்தங்கள்" போடும் சத்தங்கள்.


"சப்தங்கள்" போடும் சத்தங்கள்.
============================================ருத்ரா


"த்யுப்வாத்யாயதனம் ஸ்வஸப்தாத்"


த்யு பூ ஆதி ஆயதனம் ஸ்வ ஸப்தாத்.


(மேலே உள்ளது கோர்த்து எழுதியது.கீழே உள்ளது பிரித்து எழுதியது)

இது ப்ரம்ம சூத்ரம் முதல் பகுதி 2 ஆம் பிரிவின் 3 ஆம் உட்பிரிவின் முதல் வரி.

வேதம் என்பது ஒலி மொழி.அதுவும் கடவுள் மொழி.அது மனிதர்களால் எச்சில் படுத்தப்படக்கூடாது.மனிதன் அதை ஒலித்தால் அது மாமிசம் ஆகி விடும். ரிஷிகள் மட்டுமே ஒலிக்கலாம்.ஏனெனில் அதை கேட்டதே அவர்கள் தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆணி அடிக்கப்பட்ட இந்த "சனாதனமே" இந்துத்துவாவின் அடிப்படை."பிறப்பு" "பூப்பு" "இறப்பு" என்ற சொற்கள் எல்லாம் "புண்யாஜலம்"தெளிக்கப்பட பிறகே காதில் விழவேண்டிய சொற்கள்.அது வரை அது தீட்டு தான்.அதனால் தான் குழந்தை பிறந்த செய்தியின் "பிறப்பு" மகள் பெரியவ‌ள் ஆகி விட்ட செய்தியின் "பூப்பு"ஆகிய சொற்கள் கூட தீட்டு ஆகி காதில் தேள் கொட்டியது போல் ஆகிறது அந்த "வைதிகாளுக்கு".

போகட்டும் பிரம்ம சூத்திரத்துக்கு வருவோம்.
த்யு பூ ஆதி = ஒளி நிறைந்த மேலுலகம்(வானம்) கீழ் உலகம் (பூமி)முதலியன‌
ஆயதம் = முன்கூட்டியே வந்தவை (செல்வமாய்)தங்கியவை.

இவையெல்லாம் நமக்கு படைக்கப்பட்டவை."ஏற்கனவே(சொத்தாக) இருப்பவை"
இதையே அந்த சப்தம் (வேதம்)சொல்கிறது என்கிறார் பாதராயணர்.
இந்த "ஸ்வஸ்ப்தாத்" என்ற சொல்லே இங்கு மிகவும் சிந்திக்கத்தக்கது. இதற்கு

"சப்தமே அப்படி சொல்லிவிட்டது அப்புறம் என்ன?"

"சப்தமே தானாக அப்படி பூமி வானம் போன்றவற்றை சொல்கிறது அல்லது படைத்து விட்டது."

சப்தம் சப்தம் என்கிறார்கள்.அதை இன்னும் சமஸ்கிருதப்படுத்தி "ஸ்ருதம்" அல்லதி "ஸ்ருதி" என்கிறார்கள்."காதால் கேட்டது" அல்லது "காதில் விழுந்தது" என்பதே அது.இன்னும் பாதராயணரைக்கேட்டால் ஸ்ருதி கூட மனித செவியில் பட்டு தீண்டப்பட்டு மாமிசம் ஆகி தீட்டு ஆகிவிடலாம் அல்லவா. எனவே "சப்தம்" "சப்தம்"என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பிரம்மத்துக்கு எதிராக வாதம் செய்பவர்களும் "ரிஷிகள்" கேட்டது தானே ,கேட்டதை விகாரமாக்கி (மாற்றி)உபநிஷதம் (அருகில் உட்கார் கேள் )சொல்லி யிருக்கிறார்களே என்றால் "ரிஷி"களுக்கே எல்லா லைசென்ஸ் கொடுத்தாகி விட்டது என்பது போலும் பேசுகிறார் பாதராயணர் என்ற வியாசர்.
"ரத்தத்தின் ரத்தம்" "உடன்பிறப்பு" போன்றவற்றிற்கே இந்த தீண்டாமை என்றால் அழுக்குப்பிடித்த அடுத்தவர்கள் மீது அவர்களது "ஜாதீய" தீண்டாமை எப்படியிருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை.

சரி.பூமி தோன்றியது வானம் தோன்றியது பற்றிக்கூறும் "ஒலி"யே பூமி ஆகுமா? வானம் ஆகுமா? எது காரணம்(பூமி முதலியன)? எது காரியம் (பூமி பற்றிக்கூறிய ஒலி)?என்பதை ஆராயவேண்டும் அல்லவா என்பதே பிரம்மசூத்திரத்தை விமர்சிப்பவர்கள் நொக்கம்.அவர்கள் இங்கே ஸாங்கியம் ந்யாய வைசேஷிகம் போன்ற தத்துவங்களை வைத்து வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். புத்தமும் இதில் அடங்கும்.பிரம்ம சூத்திரம் முழுவதம் "சப்தம்" என்று ஒலிக்கும்போதெல்லாம் நாம் இந்த சிந்தனைகளை யெல்லாம் முன்னே கொண்டு வரவேண்டும்.வேதம் எனும் ஒலி எல்லோர் காதிலும் விழட்டும் அப்போது தான்... அதற்கப்புறம் தான் அது நகர்வதற்கே வழிகிடைக்கும்.."ஒலி கொடு வழி பெறு" என்பதும் இதுதான்.பிரம்ம சூத்திரம் வந்த பின்னணியும் இது தான்.காட்டு மனிதன் ஒலி அல்ல அது என்றும் அப்படி இருந்தால் அது கராத்தே ஒலி போல் ஆ ஊ என்று தான் இருந்திருக்கமுடியும்.பித்தாகோரஸ் தேற்றம் எல்லாம் அது சொல்கிறது என்கிறார்கள்.எனவே ரத்தமும் சதையுமாய் இருக்கும் மனிதனை அதே ரத்த வாடையிலும் காம குரோத விரோத உணர்ச்சித்தீயை கொளுத்தியும் தான்
அது கூச்சல் கிளப்புகிறது.ரிஷி மூலம் நதி மூலம் கேட்கக்கூடாது என்று ஆரம்பித்து அந்த "நாலு வித"மதமாச்சரியங்களே நான்கு மறை ஆகிப்போனது.

ஒரு வழியாய் அதற்கு வரிவடிவம் கிடைத்த பிறகு தான் தெரிகிறது அந்த ஒலி எங்கிருந்தோ வரவில்லை என்று. (விட்டால் "பிக் பேங்க்"
குக்கு முன்னாலேயே ஒலித்தது என்று சொல்லிவிடுவார்கள்.ஏற்கனவே இந்த வேதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட பிள்ளயாண்டான் ஃபிஸிக்ஸில் பி.ஹெச்.டி வாங்கினால் "மைக்ரோ பேக்கிரவுண்ட் ரேடியேஷனுக்குள்"ரிக் வேதம் இருக்கிறது என்று விக்கிப்பீடியாவை சாக்கடைப்பீடியா ஆக்கி விடுவான்). நம் அசிங்க ரத்தம் சொட்டும் வாள் அம்பு ஈட்டி மற்றும் சக்கராயுத சண்டையிலும் சோமக்கள் போதைக்கூச்சல்களிலுமிருந்து தான் வந்தது என்று புரிகிறது.

இருப்பினும் வேதம் எல்லோராலும் அறியப்படவேண்டும்.

சனாதனம் என்ற சொல் எவ்வளவு முரண் பட்டது என்பது இன்னும் ஒரு சான்று உள்ளது.பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலந்து ஒன்றான பிறகு தான் விடுதலை எனும் "மோட்சம்" கிடைக்கும்.அது வரை இது மும்மலங்களால் (பிறப்பு ஞானம் கர்மம்)அழுக்கடைந்து இருக்கும்.அதனால் தான் "பிறப்பு" முதலானவை எல்லாம் இங்கு தீட்டு.பரமாத்மா எனும் பிரம்மம் இன்று வரை "ஒலி"க்கப்படுவதே சனாதனம் என்றால் அப்படி ஒலிப்பதற்கு வாய் நாக்கு உமிழ்நீர் அதற்கு ஒரு உடம்பு உயிர் முதலியன வேண்டுமே? என்றும் நிலைத்திருக்கும் தன்மை என்றால் அது இன்றுள்ள நாக்கு இன்னும் மில்லியன் ஆண்டுகளுக்கு பின் வரும் நாக்கு என்ற உயிர்ச்சங்கிலி தொடரவேண்டுமே. அதை வெட்டி விட்டு பிறப்பு என்பதே தீட்டு வேறு உயிர்களும் தீட்டு என்று சொன்னால் மேற்கிளையில் இருந்து கொண்டு கீழ்க்கிளையை வெட்டுவதைப் போன்ற மேதாவித்தனம் தான் சொல்கிறது "நியாய வைசேஷிகம்"?வரிசையாக சிந்திக்கும் அறிவு என்று தான் நியாய வைசேஷிகத்துக்கு அர்த்தம்.சாங்கியம் என்பதும் அப்படி ஒரு அறிவின் ஒழுங்குமுறையைத்தான் (லாஜிக்)வலியுறுத்துகிறது.வேதம் சும்மா சும்மா "சப்தம்" போடுகிறது.இப்போது ஸ்லோகம் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

அடுத்து தர்க்கத்துள் நுழைவோம்.

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக