திங்கள், 3 ஏப்ரல், 2017

விஜயசேதுபதியின் ராஜ வேட்டை.

விஜயசேதுபதியின் ராஜ வேட்டை.
==========================================ருத்ரா இ பரமசிவன்.

குறிவைத்து தான் அடித்திருக்கிறார்
விஜயசேதுபதி.
அதுவும் "மாணிக்கக்  கல் கொண்டு".
இது விஜய்சேதுபதியின் ராஜவேட்டை.

இந்த யுகம் ஊடகங்களுக்கானது !
இருப்பினும் அத்தனை குறுகியதா?
டிவிக்களின் டி ஆர் பி  ரேட்டிங்க்
அத்தனை ரத்தக்களரிகளிலா
நிச்சயம் செய்யப்படுகிறது?
அந்த அகல ஆந்தைக்கண் காமிராவுக்குள்ளும்
அத்தனை அரசியலா? வில்லத்தனமா?
அந்த அடி தடிகளின் கொட்டங்கச்சிக்குள்ளும்
ஏழு கடலையே நீச்சல் குளம் ஆக்கி
"ஜலக்கிரீடை" நன்றாகவே செய்கிறார்
விஜய சேதுபதி.

இவர் அந்த பாத்திரமாகவே மாறி விட்டார்.
அந்த பாத்திரத்திற்காகவே
பிறப்பெடுத்து வந்திருக்கிறார்.
கதைக்காகவே அளவெடுத்து தைத்தது  போல்
பாந்தமாய் பொருந்துகிறார்.

இப்படியெல்லாம் தான்
"யதார்த்த மான பாத்திரத்தை"
புளி போட்டு விளக்குவார்கள்
பேனா மன்னர்கள்.

நடிப்பின் எழுத்துக்களில்
இவருக்கு தெரிந்தது எல்லாம்
உயிரெழுத்து உயிரெழுத்து உயிரெழுத்து தான்.
நடிப்பில்
உயிர்ப்பை வரவழைக்க அரிதாரத்தால் முடியாது
என்று
தன்னை செதில் செதிலாக உரித்துக்காட்டுபவர்.

சினிமா என்பதே "ஜிகினாக்காடுகள்" தான்.
இவரால்  மட்டுமே தன்  மீது
மண்வாசனையை பூசிக்கொள்ள முடிகிறது.
மனித வாசனையை அணிந்து கொள்ள முடிகிறது.

இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள்
நம் தமிழ்ப்பட எல்லா "ஜாம்பவான்களையும்"
ஒரே கிண்ணத்தில்
ஜூஸாக்கி தரும் திறமை மிக்கவர் என்றால்
அது மிகையே இல்லை.
கவண் (கல்)  உண்மையிலேயே
இந்த இருவர்க்கும் சிறப்பான திருப்புமுனையை
தரும் ஒரு மைல்கல்.

=========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக