திங்கள், 9 ஆகஸ்ட், 2021

முட்களைத் தேடுகின்றான்.


2 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

 




அம்மாவின் தோளில்

இருக்கும் மகன் என்ற‌

அந்த சிறுபயல்

அம்மாவை 

இன்னும் முழுதாக 

புரிந்து கொள்ளவில்லை.

நாளை வரும் 

அவன் மனைவியே

அன்பில்

அவள் அம்மாவுக்கு 

போட்டி என்று.

தோளை விட்டு இறங்கிய‌

இப்போதைய இந்த‌

மகனுக்கும்

புரியவில்லை

இந்த மனைவிதான்

அவன் அம்மா என்று.

அதனால் தான்

மனைவி பரிமாறும்போதெல்லாம்

என் அம்மாவின் கைப்பக்குவம் வருமா

என்று கேட்கிறான்.

அந்த மல்லிகைப்புன்னகையுடன்

இலையில் விழும்

மல்லிகைப்பூ சாதத்திலும்

முட்களைத் தேடுகின்றான்.

சொற்கள் கூட பூக்கள் தானே.

அதைக்கொண்டா கல்லெறிவது?


_______________________________ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக