ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சாமி



சாமி 

எங்க வீட்டுக்கு வந்து

தீட்டு கழிச்சு

சாமிக்கு பூஜை பண்ணிக்குடுங்க‌

சாமி!

முடியாதுடா.

ஏஞ்சாமி?

அவாள்ளாம் வந்து 

அர்ச்சனை ஓதினாளோ இல்லியோ.

சாமியே தீட்டு ஆயிடுச்சு.

என்ன சாமி சொல்றீங்க!

ஆசாமியோ பேந்த பேந்த முழிச்சான்.

தீட்டா?

பாற்கடலில் படுத்திருந்த 

பரந்தாமனுக்கும்

ஒன்றும் புரியவில்லை.

தமிழில் 

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!"

ஆகா!

தேன் மழையோடு

நெய் அமுதும் வழிந்தது போல் அல்லவா

இருக்கிறது

என்று திளைத்திருந்த பகவானுக்கு

அவர் சொன்ன "தீட்டு" என்பது தான்

அவர் காதிலேயே ஈயத்தைக்காய்ச்சி

ஊற்றியது போல் இருந்தது.

துடியாய்..துடித்தார்.

நாரதா நாரதா என்று

அலறிக்கொண்டிருக்கிறார்.

_____________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக