திங்கள், 2 செப்டம்பர், 2019

பேரழகு

 

பேரழகு
================================================ருத்ரா

பச்சை மேனியாய் புல்லின் கடலில்
பள்ளிகொண்டு கிடப்பவன் நீ.
மலைகளின் முகடுகளும்
அழகிய தலையணைக்  கூட்டங்களாய்
அருகில் படர்ந்து கிடக்க
ஆழ்ந்தே துவங்கிக்கிடப்பவன் நீ.
ஆழ்வார்கள்  அமுதத்தமிழில்
பாடிப்பாடிக்களித்ததனால்
மயங்கிக்கிடந்தாய் நீ.
அப்படியே நீ கிடக்கும்  வண்ணம்
அழகு அழகு பேரழகு!
அதைக்குலைக்க வேண்டும் என்றால்
கோவிலில் கேட்கும்
இரைச்சல்கள் கூச்சல்கள் எல்லாமும்
அரச்சனை மந்திரங்கள்
எனும் பெயரில்.

=====================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக