சனி, 21 செப்டம்பர், 2019

தோழமை மிகு சியாமளம் அவர்களே

 
   
Syamalam Kashyapan






தோழமை மிகு சியாமளம் அவர்களே


உங்களுக்கு என்
அன்பான வாழ்த்துக்கள்.
உங்கள் பாப்பாகுடி அல்லது
பொட்டல் புதூர் தமிழில்
நாலு திட்டு திட்டிவிடுங்கள்.
இவ்வளவு காலம் தாழ்த்தி
உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எழுதியமைக்கு.
அந்த இனிப்புத்திட்டுகள்
எல்லாம் எனக்கு
இருட்டுக்கடை அல்வா தான்.
அம்பாந்த்ரம் தொட்டு ஓடும்
அந்த பளிங்கு தாமிரபரணி
எங்கள் கல்ட‌குரிச்சியையும்
நனைத்துக்கொண்டு செல்லும்போது
நம் தமிழைத்தானே
இனிக்க இனிக்க தடம் பாய்ச்சிச்செல்கிறது.
உங்களுக்கு இந்த
வரிகளை மிதக்கவிடும்போது
நாணற்கூட்டங்களின் இடுக்குகள் வழியாக‌
கண்ணடிக்கும் அந்த தாமிரபரணி
நம் நெஞ்சத்தைக்கிள்ளிக்கொண்டல்லவா
செல்கிறது.
அந்த நினைப்புகளை
நெளியல் இட்டு அதில் விடும்
பம்பரம் தான் இந்த எழுத்துக்கள்.
ஆனால்
அது காலத்தை பின்னோக்கிச்சென்று
இழுத்து வைத்து
நம் இதயங்களை சுழலச்செய்கிறது.
சுழலும் வரை சுழலட்டும்.
பழம் நினைவுகளே
இப்போது நம் கையில் உள்ளக்கருவூலம்.
வணக்கம்
மீண்டும் சந்திப்போம்.

இப்படிக்கு
உங்கள் தோழன்
செங்கீரன்.

=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக