வியாழன், 26 செப்டம்பர், 2019

பொங்கல் வெண்மழை





பொங்கல் வெண்மழை உள் பொழிந்தன்ன..

============================================================கல்லிடை சொற்கிழான்.




கழை நரல் தும்பி கவின் மொழி தூஉய் 

இழை படுத்தாங்கு பண்தொடை பரவ 

பொங்கல் வெண்மழை உள் பொழிந்தன்ன 

மயிலிய நுண்மயிர் மெல் இறை எல் வளை 

கனை குரல் ஆங்கே தேன் பிலிற்று மிதப்ப 

யாதானும் நாடாமால் ஊராமால் 

விண் உரிந்து மண் உறைந்து 

விழி ஓரா சுரன் புக்கு முள்ளியாற்று 

முளி இருள் மூழ்கியதோர் வருங்காலை 

களிகூர் நறிய நல் புகை ஊட்டும்

அவள் வால் எயிற்றுக் கொல் நகை

கல்லென் கடும் ஊழும் கால் இடற

மண் சாய்த்தும்  மகிழ்வன் யான் 

ஊர் தரும் அவள் வளை நிரல் 

மீள் தரும் அணி இழை களிபெய்ம் 

நாள் மீட்டு கவின் உறுத்த 

கடுகும் விரையும் மன்னே 

கல் பொரியும்  இக்கடுஞ்சுரம் காண் .


=================================================

(இதை எழுதியது "கல்லிடை  சொற்கிழான்" எனும் 

நானே தான்.( ருத்ரா இ.பரமசிவன்)


===================================================



(காதலியை விட்டு பொருள் தேடிச் செல்லும் காதலன் 

காட்டின் கரடு முரடு வழியில் அவள் மீது  கொண்ட காதல் 

நினைப்பில்  கால் இடறி விழுகின்றான்.அதை நினைத்து 

மகிழ்ந்து விரைவில் மீண்டும் வீடு திரும்பும் களிப்பில் 

திளைக்கிறான். இதுவே இச்சங்கநடைச்செய்யுளின் 

உட்பொருள்.)


===================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக