வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பதஞ்சலி.

பதஞ்சலி.
========================================ருத்ரா

நாட்களை
தினமும் புளி போட்டு
விளக்கி விளக்கி
பளபளப்பாக வைத்துக்கொள்ள
நினைக்கிறோம்.
நிகழ்வுகளைக்கொண்டு
துடைத்து
பளிச்சென்று தெரிய
பாடான பாடு படுகிறோம்.
நம்மையோ
மனப்பாம்பு நம் உள் புகுந்து
முறுக்கு முறுக்கு என்று
முறுக்குகிறது.
மூச்சுக்கயிற்றைக்கொண்டு
அதை இறுக்கி
முடிச்சு போட
என்னென்னவோ யோகா செய்து
அதாவது "ஓகம்" செய்து
பழகிக்கொள்ள வேண்டும் என்று
சொல்கிறார்கள்.
அப்படித்தான்
விரலை மாற்றி மாற்றி வைத்து
மூக்கைப் பிடித்து
மூக்கை விட்டு
பயிற்சி செய்ய ச்சொல்கிறார்கள்.
அதெல்லாம் சரி தான்.
இப்போது
மூக்கைப்பிடித்த நான்
மூக்கை த் திறக்க முடியவில்லை.
முடை நாற்றம்!
பதஞ்சலி சொன்னார்
அவர் சொன்னார்
இவர் சொன்னார்
என்பதெல்லாம்
இந்த மனிதனை
சாதி மதங்களின் மலக்குழியில்
அமிழ்த்தி விடைத்தானா?
அப்படித்தள்ளியவர்கள் தான்
பிரம்மனின் புத்திரர்களா?
மும்மலம் அறுக்கும் உபாயம்
சொல்வது இருக்கட்டும்.
மனம் நிறைய சுமக்கும்
இந்த சாத்திர மலங்களை
சுத்தப்படுத்துவதற்கு
என்ன ஆசனம் இங்கே இருக்கிறது?


=====================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக