வியாழன், 26 செப்டம்பர், 2019

ஒரு பூவின் தீக்குளிப்பு





ஒரு பூவின் தீக்குளிப்பு
==================================ருத்ரா


பசுந்தீயில்
தீக்குளிக்கும்
மஞ்சள் சீதையே!


ராமன் ஆணையிட்ட 
குளியலின் நெருப்பில் 
நனைந்து கொண்டிருப்பவனும்
ராம‌னே.


ஊரில் எவ‌னோ
ஒருவ‌ன் சொன்னான்
என்ற‌தும்
அவ‌ன் செவிக‌ள் வ‌ழியே
தீக்குளித்திருக்க‌வேண்டும்.


க்ஷ‌த்ரிய‌ த‌ர்மத்தின் பெயரில்
ஆயிர‌ம் ராவ‌ண‌ன்க‌ளின்
அழுக்கை அல்ல‌வா
ம‌டியில் க‌ட்டிக்கொண்டிருக்கிறான்.


அவ‌தார‌த்துக்காக‌
த‌ரையில் இற‌ங்கிய‌வ‌ன்
அப்போதே அவ‌ச‌ர‌மாய்
சிக்ம‌ண்டு ஃப்ராய்டின்
அரிதார‌த்தைப் 
பூசிக்கொண்டு விட்டானோ?


மில்லிய‌ன் மில்லிய‌ன்
ஆண்டுக‌ள் ஆனாலும்
பெண்ணிய‌ம் எனும்
க‌ண்ணிய‌ப்பூவே!


உன் பூப்பு நீராட்டின்
ம‌ஞ்ச‌ள் குங்கும‌ ச‌ந்த‌ன‌க்குழம்பில் 
எந்த‌ எரிம‌லைக்குழ‌ம்பும்
ப‌ன்னீர் ம‌ழை தான்.



============================================
o4 ஜூன் 2013




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக