சனி, 28 செப்டம்பர், 2019

கீழடி..2

கீழடி..2
====================================ருத்ரா

தமிழர்களின் எழுச்சி
இப்போது பொங்குமாங்கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.
"விழியங்கள"
எத்தனை எத்தனயோ
இணையத்தின் தமிழச்சோலையில்
விழி காட்டுகின்றன.
ஆனால்
வழி காட்டுகின்றனவா?
ஐயமும் பயமும் தான்
ஏற்படுகிறது.
தமிழன்
கன்னடம் தெலுங்கு மலையாளம்
ஆகிய மொழிகளையும்
தமிழ்க்கிளைகளாகத்தான் கருதினான்.
அவர்கள் தமிழ் நாட்டில்
தமிழின் உள்ளத்தோடு
இருப்பதாகத்தான்
கருதிக்கொண்டிருக்கிறான்.
திராவிடம் எனும்
ஒரு பாசக்கயிற்றால் தான்
அவர்களை
பிணைத்துக்கொண்டிருக்கிறான்.
திடீரென்று
"தெலுங்கர்கள்" எனும்
குரல் தெறிப்பதன் பின்னணி என்ன?
தம் தந்தை பெரியாரையும்
தமிழர்கள் தமிழராகத்தானே
பார்க்கிறார்கள்.
அப்படியென்றால்
உள் குத்துப்பகை வாளின்
உரசல் ஒலியை
கொஞ்சம் கிளப்பலாம்
என அவர்கள் நினைக்கிறார்களா?
கிருஷ்ணதேவராயனின்
வாள் வீச்சை
தமிழ் மூவேந்தர்களின் மற்றும்
தமிழ் மொழியின் கூர்மையோடு
தெறிக்கவிடும் ஒரு தந்திரத்தில்
ஆரிய சூழ்ச்சியினை
அரங்கேற்ற முனைந்திருக்கிறார்களா?
ப்ரோட்டோ திராவிடம் என்றாலும் சரி
திராவிடம் என்றாலும் சரி
அது
கடல் கடந்து
"திரை"களையும் ஆண்டு
திரைவிடன் ஆகி தமிழன் ஆன‌
திராவிடனே அது.
வேத ஒலியில்
"த்ரவ" எனும்
நீர் (கடல்) பற்றிய‌
தமிழ்ச்சொல்லே அது.
தமிழ் எதிரிகளே!
தமிழனின் வரலாறு
பல  இமயங்களை அடுக்கி வைத்து
புதைந்து போன‌
குழிகளில் கிடக்கும் சுவடுகளாய்
இருப்பதை
இப்போது ஒரு பெரும் உயரத்துக்கு
எழுப்பப்பட்டு வருகின்றது.
அதில்
குறுக்கே  வந்து
ஊளையிடுவதை நிறுத்துங்கள்.
இங்கு
திராவிடத்தமிழன் என்றால்
கடலலைத் தமிழன்.
தமிழ்த்திராவிடன் என்றால்
நிலத்தடி தமிழன்.
குழிகளில் கண்டுபிடித்ததை
குழிக்குள் மூடிவிடும்
குள்ளநரித்தந்திரமா இது?
இதில் பகைமை நஞ்சை
புகைமூட்டம் போட முயன்றால்
பொடிப் பொடியாவீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள்.
வீறு கொள் தமிழா!
பெருங்கடல் நீ.
இவர்களின்
கொட்டாங்கச்சி அலைகளுக்குள்
நீ
உன் வீரத்தை
விரயம் ஆக்கிக்கொள்ளாதே!
ஒற்றுமை கொள்.
உறுதி கொள்.
தமிழ் வாழ்க!

=======================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக