திங்கள், 23 செப்டம்பர், 2019

மிகச் சிறப்பான புகைப்படம்




திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்களே!


மிகச் சிறப்பான புகைப்படம் இது.






ஒரு பெரும் வியப்பு


இந்த புகைப்படம் !


இந்த வண்ணக்குழம்பில்


பச்சை நிறத்தில் கூட


ஒரு "எரிமலை லாவா" இப்படி


வந்து நின்று சிரிக்க முடியுமா?


சமுதாயத்தின் ஒரு மௌன தாகம்


அந்தக்கண்களில்  அலையடிக்கிறது.


இதுவும் கூட ஒரு "சவுந்தர்ய லஹரி தான்"


காலடியார்களும் நாலடியார்களும்


தத்துவங்கள் எத்தனையோ


சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள்.


நான் தேடியது


இங்கு அல்லவா இருக்கிறது.


என்ன அது?


அந்த "நான்கு வர்ணம்"இங்கு இல்லை


என்பதே


நான் தேடிய சமுதாய வர்ணம்.


தூரிகை கொண்டு


தீட்டும் வர்ணங்களுக்கு


கோடரியையா கொண்டு வருவது


என்ற கேள்வியின்


அடர்த்தியான ஆரண்ய காண்டம் இது!


நெற்றி அடிச் சித்திரம் இது.


அருமை ! அருமை !அருமை.!


====================================== ருத்ரா இ பரமசிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக