சனி, 9 செப்டம்பர், 2017

அனிதா

அனிதா
======================================ருத்ரா

மருத்துவக்கனவை
தன் சிவப்பு அணுக்களில்
துடித்துக்கொண்டிருந்தவள்
துடிப்பு அடங்கிப்போனாளே.
கேவலம்
அந்த "போட்டித் தேர்வு கண்டு" அஞ்சியா
தூக்குக்கயிற்றைத் தேடினாள்?
அது பற்றி எதுவுமே தெரியாது
என்ற போதும்
அந்த "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது"
என்றல்லவா
அதையும் எழுதி
எண்பது மதிப்பெண்கள் பெற்றாள்.
ஆனால்
எதிரிகள் எறிந்த அம்பை மார்பில்
வாங்கிய போதும்
முதுகில் குத்தியவர்களின்
தந்திர வியூகத்தில்
தலை சாய்ந்து போனாள்
அந்த வீரமங்கை!

=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக