செவ்வாய், 19 செப்டம்பர், 2017

மகாளய அமாவாசை


மகாளய அமாவாசை
====================================ருத்ரா

இந்த
ஈசல் கூட்டங்களைக்கண்டு
ஈசனுக்கு சிரிப்பு தான் வருகிறது.
இந்த‌
வாழைக்காய் கத்தரிக்காய்
பச்சரிசி வகையறாக்களா
பிதுர்களை பசியாற்றுகிறது?
நீல விசும்பும்
நீள் பெருங்கடலும்
ஆபாசபடுத்தப்படுவதில்
அந்த "ஹிரண்யகர்ப்பனுக்கு"
கொஞ்சமும் உடன்பாடில்லை.
வேத மந்திரங்களைக்கொண்டு
ஒரு "எலக்ட்ரோமேக்னடிஸத்தின்"
சுவடுகளைக்கூட‌
கண்டுபிடிக்கமுடியாத மனிதன்
இன்னும் இன்னும்
பல நூற்றாண்டுகளை
நோக்கிப்பின்னோக்கி
ஒரு பேரிருளில் போய் விழுவதில் தான்
சந்தை இரைச்சல்களை
சரித்திரம் ஆக்கிக்கொண்டிருக்கிறான்.
டிவி ஊடகங்களுக்கும்
ஹிட்ரேட் எனும்
பிண்டங்கள் கிடைத்துவிடுவதால்
அற்பத்திலும் அற்பமான மகிழ்ச்சி.
"தமஸோ மாம் ஜோதிர் கமய‌"
தலைகீழாக உச்சரிக்கப்படுகின்றன.
எங்களுக்கு
வெளிச்சமே வேண்டாம்.
இருட்டு தான்
எங்களுக்கு பிடித்த‌
பிண்டமும் பண்டமும்!

=============================================




2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

காக்கைகளுக்கு பிண்டம் வைத்து மந்திரம் சொல்லும் இந்த காக்காய் கூட்டங்களைக் கண்டு அவை ஓடியே போகின்றன.

___________________________ருத்ரா

கருத்துரையிடுக