ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

"நவோதயா"

"நவோதயா"
==================================ருத்ரா

இப்படித்தான்
சர்வோதயா என்றார்கள்.
அந்த நீர்த்துப்போன கம்யூனிசம்
வேர் பிடிக்கவே இல்லை.
இப்போது
சரஸ்வதி வீணையை மீட்டிக்கொண்டு
குடிசை வீட்டுக்குள்ளெல்லாம்
வெளிச்சம் ஏற்ற‌
வரப்போவதாய் சொல்கிறார்கள்.
கொஞ்சம் தலையசைத்தால் போதும்.

"இந்த சிக்ஷா மந்திரில்
எப்போது வித்யாப்யாசம்"
வைத்துக்கொள்ளலாம்
என்று
அஷ்டமி நவமி பார்க்கச்சொல்வார்கள்.
அப்புறம்
அறிவின் சிந்தனைவெளியில்
மஞ்சள் குங்குமம் அப்பி
நாலுவர்ண மயமாக்கி
"மேஜ் பர் க்யா ஹை
மேஜ் பர் பச்சோங்கி கிதாப் ஹை"
என்று பாடம் துவக்கி விடுவார்கள்.
நம்
ஆனா ஆவன்னாவும்
அணில் ஆடும்
குப்பைத்தொட்டிக்குள் கிடக்கும்.

=============================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக