வியாழன், 21 செப்டம்பர், 2017

அவை தான் அது!


அவை தான் அது!
==========================================ருத்ரா

கண்ணே!
காதலின் தொன்மையை
எந்த ஃபாசில்களிலிருந்து
நிறுவுவது?
அதோ மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த
ஒரு பெண்ணின் கபாலம்
அந்த மியூசியத்தில்
இருக்கிறது.
எனக்கு அந்த கண்குழிகளில்
ஒன்றும் தெரியவில்லை.
பெண்ணே!
இன்றும் உன் ஆழம் காணமுடியாத
ஒரு அமர்த்தலான பார்வை தான்.
மண்டையோட்டின் மேடுகளில் கூட
மயில் தொகை அன்ன
கூந்தல் கண்ணுக்குத்தெரியவில்லையே.
வெறும் பாஸ்வரத்தின் ரசாயன
உன் மிச்சத்தில்
காதலின் உன் முதல் ரசாயனத்தின்
பக்கம் எங்கே?
ஆ! அதோ
உன் சிரிப்பு
எவ்வளவு அழகு?
அந்த பல் வரிசையில்
வள்ளுவன் காட்டிய
அந்த வாலெயிற்று இன் நீர்
வைரத்திவலைகளை
வாரி இறைக்கின்றதே!
அந்தக்கடல்களில்
எல்லா "சுராசிக்" மற்றும்
"பிரி கேம்பிரியன்"யுகங்களும்
அல்லவா மூழ்கிக்கிடக்கின்றன.
உற்றுக்கேட்கிறேன்
டி.ரெக்ஸ் எனும் பயங்கர‌
டினோசார்களின் உறுமல்கள் மட்டும்
அல்ல அவை.
நீ அன்றொரு நாள்
நான் ஒரு முத்தம் கேட்டதற்கு
அடம்பிடித்து
மறுத்து அதிர்வு அலைகள்
ஏற்படுத்தினாயே
அவை தான் அது!

====================================

2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி ராஜி அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக