சனி, 30 செப்டம்பர், 2017

கமலின் பதினொண்ணாவது அவதாரம்.


கமலின் பதினொண்ணாவது  அவதாரம். 
 ==================================================ருத்ரா

உலகநாயகன் அவர்களே!
இந்த பட்டம்
நாங்கள் விசிலடித்து
காகிதப்பூக்கள் சிந்தி
சினிமாஅரங்கத்தின்
இருட்டு உலகத்தில் மட்டுமே
மின்மினிப்பூச்சிகளாய்
துடி துடித்துச்சிதறும்படி
கொடுத்தது.
இதைத்தாண்டி
எங்கோ கரீபியன் தீவுகளின் இடையில்
ஏதாவது ஒரு
கொசுத்தீவிலும்
இப்பட்டம் பட படக்குமா
எனத்தெரியவில்லை.
கச்சாபிலிமின் பொந்தைவிட்டு
வெளியே வந்து
அவ்வப்போது
"ஊசிப்பட்டாசே ஊசிப்பட்டாசே
வச்சாலே வெடி டமார் டமார்"
என்று
திகம்பர சாமியார் கணக்காய்
அறிக்கைகள் தந்த போது
நாங்கள்
புல்லரித்து தான் போனோம்.
அதுவும்
தமிழனின் தொன்மை ஒளி தொட்டு
சிந்துவெளி..திராவிடம்
என்றெல்லாம் நீங்கள் பேசியபோது
அன்று மெரினாவில்
ஆயிரக்கணக்காய் முளைத்த
மினி சூரியன்களின்
வெளிச்சத்தை  கொஞ்சம்
அள்ளிபருகி விட்டீர்கள்
என்றல்லவா நினைத்திருந்தோம் !
ஆனால் திடீரென்று
உங்கள் ட்விட்டர் குரல் பிஞ்சுகள்
கொஞ்சம் இசகு பிசகாய் பிய்ஞ்சு
போய் விட்டதோ என்று
கலவரம் அடைந்திருக்கிறோம்.
கருப்புக்குள்  சிவப்பு ..
அப்புறம் சிவப்புக்குள் காவி?!
அது எப்படி?
உங்கள் "தசாவதாரத்தில்"
உங்கள் நடிப்பின் அவதாரங்கள்
அத்தனையும் அற்புதம்..
அந்த முக்காடு பாட்டி உட்பட !
அமெரிக்காவின்
"புஷ்ஷுக்குள்ளும் " புகுந்து
விளையாடி விட்டீர்களே !
அப்படியே "மோடிஜி"குள்ளும்
ஒரு அவதாரம் எடுக்க ஆசையோ?
நம் சூப்பர் ஸ்டார் இப்படி
எந்த சட்டைவேண்டுமானாலும் போட்டு
வாய்ஸ் கொடுப்பார்.
அப்புறம் அதை நான் போடலை
செந்தில் தான் போட்டிருக்கிறார்
ஆனால் சட்டை என்னுது என்று
சொல்லாமல் சொல்லி
 தியேட்டரையே வெடிச்சிரிப்புகளால்
தூளாக்கிவிடுவார்.
அந்த படையப்பாவுக்கு எல்லோரும்
பாபாக்கள் தான்.
பசுவுக்கு பாப்பா பாட்டு
ஏற்கனவே
அண்ணாமலையில்
பாடியாகி விட்டது!
ஆதலினால் கமல் அவர்களே
நீங்களும் அவரைப்போல்
ஏதாவது இமயமலையைக்கெல்லி
காவி   பாபாக்களைஎல்லாம்
கொண்டு வரவேண்டாம்.
புதிய தலைமுறையினரிடமிருந்து
புதிய யுகம் ஒன்றை
பதியமிடும் இயக்கத்தை
விட்டு விடாமல்
முன்னெடுத்துசெல்லுமாறு
அன்போடு வேண்டிக்கொள்கிறோம் .

============================================



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக