ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இட்லி சாப்பிட்டார்.


இட்லி சாப்பிட்டார்.
==========================================ருத்ரா

"இட்லி சாப்பிட்டார்.
இடியாப்பம் சாப்பிட்டார்."

பொய்யின் பொய்யா
மெய்யின் பொய்யா?
இல்லை
மெய்யின் பொய் மெய்யா?
மெய்யிலும் மெய்யானவையே
பொய்யான போது
பொய்மெய் மெய்பொய்
மெய்மெய் பொய்பொய்
எப்படி இனி சொல்ல?
புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்
பொய்மையும் வாய்மையிடத்தே
என்று
இன்னும் இன்னும்
நூறாண்டுகளுக்கு
குத்தகை டெண்டர் கட்டிங்குகளோடு
மண்வளம் மலைவளம் எல்லாம்
பினாமி சொத்தாக்கி ஆண்டு மகிழ
நல்லாட்சி தொடர‌
இந்த
பொய்மெய் மெய்பொய்
பொய்பொய் மெய்மெய்
ஜிகு ஜிகு ஜிகு
ரயில் விளையாட்டு
சுகம் சுகம் பரமசுகம்!

========================================

1 கருத்து:

கருத்துரையிடுக