வெள்ளி, 1 செப்டம்பர், 2017

கமலின் கோட்டை

கமலின் கோட்டை
===================================செங்கீரன்

எங்கிருந்து வேண்டுமாலும்
ஆரம்பிக்கலாம் என்றார்.
ஓட்டுகளைக் கொண்டு
கோட்டை கட்டுபவர்களே
நீங்கள்
வேட்டையாடப்படும்
எலிகள் என்பதை
உணருங்கள் என்று
அவருக்கே உரிய நடையில்
சொற்களைக்கொண்டு
அபிநயித்தார் கமல்.
ஆனால்
அதற்கு நண்டு நடனம்
ஆடினார் தமிழிசை அவர்கள்.
தன் சொற்கொடுக்குகளால்
அவரை தாக்கினார்
காயம் பட்டதோ இவர் தான்.
கமல் எனும்
ஒரு நடிகர்
அரசியலுக்கு வருவதில்
இந்த தேசப்படமே
கிழிந்து போனதாய்
தொண்டை கிழிய‌
அறிக்கை விட்டார்.
சூப்பர்ஸ்டார்
அரசியல் பயணம் துவக்குவதாய்
தாரை தப்பட்டைகள்
முழங்கிய போது
உள்ளுக்குள் இருந்து
சுருதி கூட்டுவது
அமித்ஷா என்று
இவர் நினைத்துக்கொண்டதால்
இந்த அளவு
சொற்களைக் கொண்டு
நாட்டியம் ஆடியதில்லை.
அக மகிழ்ந்து கொண்டார்
அவரது ஆத்மீகத்தில்
இந்துத்வா வை
செருகிக்கொள்ளலாம் என்று!
அவரது
"ஆண்டவன் கட்டளை " என்ற
ஃ ப்ரேஸுக்குள்
தங்கள் பாபாக்களை
பரிமாறிக்கொள்ளலாம் என்று!
தமிழிசை அவர்களே !
உங்கள் அழகான தமிழ்ப்பெயர்
நாளை
"மிலேச்சிகா"
என்று பரிணாமம் அடைந்து விடலாம்.
ஏனெனில் இவர்களுக்கு
சமஸ்கிருதம் தவிர
மற்ற மொழியை பேசுபவர்கள்
மிலேச்சர்கள் அல்லவா?
கமலின் மனக்கோட்டை என்றும்
அவர் சினிமாவை கோட்டை விட்டவர் என்றும்
கோபம் கொப்பளிப்பதில்
உங்கள் சிந்தனையின்
வெற்றிடத்தை தான் காட்டிக்கொள்ளுகிறீர்கள்.

கடந்து உள் நோக்கு !
அது அறிவின் எல்லைகளைஎல்லாம்
கடந்து விரிந்து பரவும்.
இந்த பொருள் பொதிந்த
"கடவுள்" எனும் தமிழன் சொல்மீது
கல்லையும் சிலையையும்
கொண்டு நசுக்கும்
ஆரியத்தை அப்புறப்படுத்த
வந்ததே திராவிடம்.
கடல் அலைகள் எனும்
திரைகளையெல்லாம் கடந்து
உலகம் வென்ற
 "திரைவிடன்" எனும் "திராவிடனே "
இந்தத் தமிழன்.
திராவிடம் இல்லாத இந்தியா என்பது
வறட்டு சித்தாந்த மலடர்களின்
பொய்மைக்கருத்தே அன்றி வேறல்ல.

================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக