ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

எங்கே? எங்கே?



எங்கே? எங்கே?
===============================================ருத்ரா

கடவுளைக்கண்டு பயப்படுபவர்கள்
கடவுளைக்கண்டு பயப்படாதவர்கள்
கடவுளைக்கண்டு பரவசப்படுபவர்கள்
கடவுளைக்கண்டு கல்லாய் கிடப்பவர்கள்
கடவுளைக்கண்டு கல்லில் நார் உரிப்பவர்கள்
கடவுளைக்கண்டு மணலைக் கயிறாய் திரிப்பவர்கள்
கடவுளைக்கண்டு சிந்திக்கத்தொடங்குபவர்கள்
கடவுளைக்கண்டு படிக்கத்தொடங்குபவர்கள்
கடவுளைக்கண்டு கடவுளை எங்கே என்று கேட்பவர்கள்.
கடவுளைக்கண்டு கடவுளை மறுப்பவர்கள்
கடவுளைக்கண்டு கடவுளை உடைப்பவர்கள்
கடவுளைக்கண்டு கடவுளில் பிழைப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கேள்விகள் நெய்பவர்கள்
கடவுளைக்கொண்டு முகமூடி தரிப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கடவுளைத்தாண்டுபவர்கள்
கடவுளைக்கொண்டு கர்ப்பம் தரிப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கடவுளைக்கொல்பவர்கள்
கடவுளைக்கொண்டு காசுகள் பார்ப்பவர்கள்
கடவுளைக்கொண்டு மனிதரைக்கொல்பவர்கள்
கடவுளைக்கொண்டு அரக்கர்கள் ஆனவர்கள்
கடவுளைக்கொண்டு கூச்சல்கள் இடுபவர்கள்
கடவுளைக்கொண்டு கல்லறை வடிப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கண்ணீர் விடுபவர்கள்
கடவுளைக்கொண்டு எழுதிக்குவிப்பவர்கள்
....................................................
..................................................................
தூவிய எழுத்துக்கள் கூவின! கூவின!
கடவுள் எங்கே? கடவுள் எங்கே?

=========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக