திங்கள், 25 செப்டம்பர், 2017

கருப்புடா...கருப்பன்டா

கருப்புடா...கருப்பன்டா
==============================================ருத்ரா

விஜயசேதுபதி அவர்களே
கபாலிடா நெருப்புடா என்று
திரையெல்லாம்
சமூகநீதி புகை கக்கினாலும் கக்கியது
கும்கி யானைக்காரரும்
நெருப்புடா..நெருப்புடா
என்று கல்லாப்பெட்டியருகே
கலக்கிக்கொண்டிருக்கும் போது
ஒரு முரட்டுக்காளையை
கட்டித்தழுவும்
மெகா முரட்டுக்காளையான நீங்கள்
கருப்புடா...கருப்பன்டா என்று
எங்களை
கதிகலங்க வைக்கவேண்டியது தானே.
கிராமத்து மண்ணில்
அந்த ஜல்லிக்கட்டுக்கொம்புகள்
குத்திக்கிளறும்
புழுதிப்புயல்களில்
சமூக அநீதிகளின்
முகம் கிழிக்கும் செங்காற்றும்
சூறைக்காற்று ஆகியிருக்கிறதோ ?
இன்னும்
உங்கள் திரைக்கதையின்
அனாட்டமி எல்லாம் எங்களுக்குத்
தெரியாது?
இன்னும் அந்த "உடன் நடிக்கும்"
நடிக நடிகையர் பற்றி
பால பாடம் போன்று
அ.....அணில் என்றோ
ஆ ....அடு என்று கூடத்தெரியாது.
வாலை முறுக்கும்
வீரக்காளையின்
அந்த "திமில்" வழியே
நீங்களும் "தமில் " வாழ்க
என்று ஏதாவது
ஒரு "வெள்ளாவி"நடிகையுடன்
விழுந்து புரண்டு
கலித்தொகை அகநானூறு  எல்லாம்
சும்மா பிச்சு பிச்சு
ஒரு வீச்சு பரோட்டா போடப்போகிறீர்கள்
என சப்பு கொட்டிக்காத்திருக்கிறோம்.
அதெப்படி?
ரயில் டிக்கெட்டில்
"தமிழ்" இல்லை என்றல்லவா
முழங்கியிருக்கிறீர்கள்.
அந்த "வீரப்பொங்கலுக்கு"
எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!
"ஐ நா" திடலில்
இனவெறியர்கள் மிருகங்களாய்
நம் தமிழ்ச்சிங்கத்தின்  மீது
பிறாண்ட முயற்சித்திருக்கின்றனவே!
நம் அசோகச் சக்கரங்களும்
வேடிக்கை பார்க்கும்
வெறும் கல்தூணா?
உங்கள் "மாட்டுப்படம்"
காட்டவேண்டும்
தமிழன் எனும் நல்ல மாட்டுக்கு
ஒரு சூடு என்று.

============================================
















2 கருத்துகள்:

கருத்துரையிடுக