வெள்ளி, 15 செப்டம்பர், 2017

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
================================ருத்ரா

ரொட்டி
============================

பிசைந்து தானே
செய்யப்படுகிறது என்று
பசியும்
வயிற்றைப்பிசைந்தது?
கிடைத்ததா
ரொட்டி?

இவர்கள்
========

பரந்து கெடுக உலகு இயற்றியான்
என்கிறான் வள்ளுவன்.
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்
என்கிறான் பாரதி.
இவர்கள் எல்லாம்
எரிக்கப்படவேண்டிய கம்யூனிஸ்டுகள்
என்கிறது "சனாதனம்"

பிரம்படி
========

ஒரு பிரம்பினால்
விரிந்து பரந்த இந்த‌
பிரபஞ்சம் என்ற முதுகிலேயே
அடி விழுந்ததாமே!
அதே போல்
அந்த "ஒரு வாய் பிட்டு"
ஏன் இந்த பசிக்கின்ற வயிறுகளில்
போய் விழவில்லை?

===============================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக