ஞாயிறு, 10 ஜனவரி, 2016

வாசல்


வாசல்
=============================================ருத்ரா இ.பரமசிவன்.

உன் நந்தவனம்
பட்டாம்பூச்சிகளைக்கொண்டு
மிடைந்து வைக்கப்பட்டிருக்கிறது.
வானவில்
அந்த ஆகாயப்பறவையின்
வர்ணப்பீலிகளாய்
உனக்கு
தோரணம் கட்டுகிறது.
உன் முறுவல் கொண்டு
உலகத்து அழுக்கையெல்லாம்
துடைத்து எறிந்து விடலாம்.
உன் விழி வாசல்
உள்ளே  உள்ளே
எத்தனை வாசல்களை
திறந்து கொண்டே போகிறது.
காலின் அடியில்
உடைந்த கண்ணாடிச்சிதறல்கள்
அத்தனையிலும்
பிம்பங்கள்.. பிம்பங்கள்..
யார்  யாரோவாய்...
ஆண்டு கணக்கில்
வந்து விழுந்து கிடந்த
இன்னும்
பிரிக்கப்படாத கடிதங்களாய்
தரையில்!
காதலின் பெருமூச்சு
ஒன்று கூட
அங்கே இன்னும்
எழுத்துக்கூட்டி
வாசிக்கப்படாமல்..
தூசிகளின் யுகங்களாய்
கிடக்கின்றேன்.
நானும்  அங்கு!

=============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக