புதன், 6 ஜனவரி, 2016

விடிந்து விட்டது




விடிந்து விட்டது
============================================ருத்ரா இ.பரமசிவன்

விடிந்து விட்டது
அது என்ன
அறுபத்தியொன்பது நாழிகை
ஆனபின்னும்
அதே இடத்தில் நாம் ?
மூவர்ண ரோஜாவை
காட்டினார்கள் சூரியன் என்று.
நான்கு வர்ண முட்காடுகள் மட்டும்
மண்டிப்போனது.
நம் தேசப்படத்தின்
அந்த அழகிய முக்கோணத்திரு உருவம்
ஒரு பெரிய்ய்ய்ய்ய திருவோடு போல் ஆனதே
பிச்சை போடுபவர்கள்
வாரியிறைக்கும் புகழ்மொழிகள்
நம் நாட்டின்
ஆன்மாவின் இதயத்தையும்
குதறித்தின்பது
நமக்கு ஏன் இன்னும் தெரியவில்லை.
கணிசமாக வளர்ந்து விட்டோம் என்று
கணினிகளின் பாறாங்கல்லைக்  கொண்டு அல்லவா
நம்மை நசுக்குகிறார்கள்.
வயிற்றில் ஈரத்துணியோடும்
இடையில் கோவணதோடும்
வல்லரசுக் கனவுத் தூண்டில்
தூண்டிகொண்டே இருப்பதில்
"மங்களயான் " பறக்க விடுகிறோம்.
அதில் உள்ள "செவ்வாய்த்  தோஷத்திற்கு"
பரிகாரம் தேடி
கங்கைகளை "கும்பமேளாக்களால்"
சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
ஆம்
நெஞ்சு கொதிக்கத்தான் செய்கிறது.

==============================================







1 கருத்து:

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

திரு.நாகேந்திர பாரதி அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக