திங்கள், 25 ஜனவரி, 2016

முகம்







முகம்
===========================================ருத்ரா

அப்படித்தான்
அன்றொரு நாள்
கண்ணாடி பார்த்து.
தலை வாரினேன்.
அது  ஆளுயரத்துக்கு
நின்று கொண்டிருக்கும்
நிலைக்கண்ணாடி !

முகத்தை
எட்டு கோணலாக்கி
அழகு பார்த்தேன்.
சீப்பை
சிகைக்குள் விட்டு
அவள் நினைப்பில்
சிலிர்த்து நின்றேன்.
அட!
இதென்ன
காண்ணாடி உருகி வழிய
தடாகம் ஆனது.
கருங்கூந்தல் படர
அவள் முகம் மட்டும்
குளிக்கும் நிலவாய்
அலை அலையை
முக உருவம் போக்கு காட்டி
நெளியல்களாய்
என் நெஞ்சப்பிழியல்களாய்
பிம்பம் எல்லாமே
பொழியல்களாய்
அந்த அறை முழுவதும்
ஊற்றிக்கொண்டது
நான் நனைந்தேனா?
இல்லை நானும்
தரை முழுதும்
மெழுகுவர்த்தியின்
வெள்ளை ரத்தமாய்
உருகி அவளுடன் சங்கமம்
ஆகி விட்டேனா?
இப்போதும்
அவள் முகம்
பஞ்சு மிட்டாய் பிசிறாக
அங்கே எல்லா இடத்திலும்
தித்தித்தது.
"அடேய் எங்கேடா போய்ட்டே"
ஆஃபிஸ் போகலையா?"
அம்மா கத்தினாள்.
அவள் நெய்த்தோசை கரண்டி
என் மூக்கில் இடிக்காத குறையாய்
அருகில் தான் நின்றேன்.
அம்மா குரல் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.
நான் ஆஃபிஸ் கிளம்பிவிட்டேன் அம்மா!
அப்புறம் பார்க்கிறேன் என்று
வாசலில் இருந்து
சொல்வது போல் சொல்லிவிட்டு.
அங்கே தான் நின்றேன்.
"என்ன !பிள்ளையோடா "
அம்மா உள்ளே போய்விட்டாள்.
நான் இன்னும் அங்கு தான்
நின்றுகொண்டிருக்கிறேன்.
எனக்கு மட்டுமே கேட்கும்
அவள் சிரிப்பு
என்னை காற்றில் கரைத்து விட்டதோ?
நான் மாயம் ஆகி விட்டேன்.
கண்ணாடி அருகில் தான் நிற்கிறேன்.
அந்த பிம்பத்தில் பாதரசம் இல்லை.
நான் அவளை.
அவள் என்னை
ஊடுருவிக்கொண்டோம்..
அந்த வெறுங்கண்ணாடியில்
இதயங்கள்
கட்டிகொண்டு பிசைந்து
ஜெல்லியாய்
இந்த காலப்பரிமாணங்களோடு
நிரவி நின்றது.
அப்புறம்
கண்ணாடி சுக்கல் சுக்கலானது.
இன்னும்
அவள் முகத்தை
நான் பார்க்கவில்லையே!
.........
.........
"என்ன இது.
கண்ணாடியை யார் இப்படி நொறுக்கியது?"
அம்மா பதறிக்கொண்டே
ஓடிவந்தாள்.
.......
மாலை வீடு திரும்பியதும்
அம்மாவிடம் கேட்டேன்.
"என்னம்மா
கண்ணாடி தூள் தூள் ஆகி விட்டாதா?
உன் காலில் காயம்
ஏதும் ஆகவில்லையே."
"என்னடா சொல்கிறாய்
காண்ணாடி..
அதோ பார்
முண்டமாய் தான்
நின்று கொண்டிருக்கிறது.
நீ
என்ன கண்ணாடி வழியாய்
அப்படியே ஆஃபீசுக்கு போய்விட்டாயா?"
இன்னும் நான்
அந்த முகம் தேடி வானத்தை
வெறித்துப்பார்க்கிறேன்.
ஆம்.. அவள் கண்கள் வழியாய்த்தானே
ஆஃபீசுக்குப போனேன்..
என் மௌனம் பேசியது
அங்கு யாருக்கும் கேட்கவில்லை.

================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக