வெள்ளி, 8 ஜனவரி, 2016

பஞ்சு மிட்டாய்




பஞ்சு மிட்டாய்
===================================================ருத்ரா இ.பரமசிவன்

காயமே இது பொய்யடா
என்பதும் பொய்யடா.
பஞ்சு இனிப்பு  அடை த்த
கனவுகள் கண்களில் மிளிர
வாழ்க்கையை
சில்லறை சில்லறையாக
விற்று வாங்கி
நகர்ந்து செல்லும் உற்சாக விழா.
மதுரை கோ.புதூரில்
அருள் மிகு கள்ளழகருக்கு
எதிர் சேவை திருவிழா.
பல்லக்கு
கண்ணாடி பிம்பத்தில்
அழகர் திரு முகம்!
பக்தர்கள் பரவசம்.
இந்த ஆண்டு
அழகர்
 பச்சைப்பட்டு உடுத்திவந்தால்
பருவ மழை பூரிக்கும்.
பச்சைநிறமே அங்கு
சோழி குலுக்கிய "ப்ராபபிலிடி."
அந்த அழகரின் கண்கள் வீசும் ஒளியில்
தெரிகிறதா
"ருதம்பரா தத்ர பிரக்ஞா ?"
பதஞ்சலி யோக  சூத்திரத்தின்
48 ஆம் சூத்திரம்.
(சமாதி பாதம்)
"உண்மையையே உள்ளுணர்வு
உடுத்தியிருக்கும்"
என்பதே அர்த்தம்.
அந்த பக்தர்களின் உள்ளுக்குள் எல்லாம்
பச்சைப்பட்டு
நெசவு செய்யப்படும்
தறி ஒலியே கே ட்டுக்கொண்டிருக்கிறது.
பல்லக்கு தூக்கிகளாயினும் சரி
மயில் விசிறி ஏ ந்தியவர்களாயினும் சரி \
ஆட்டுத்தோல் பையிலிருந்து
தண்ணீர் பீய்ச்சுபவர்களாயிருந்தாலும் சரி
உலககச்சாயம் கழன்ற
"நிர்பீஜ சமாதி"யில் ஆழ்ந்து போனார்கள்.
அதாவது
எந்த கர்மவினைகளின் மூல விதைகளும்
 மூச்சிழந்து அமைதி  எனும்
சமாதி அங்கே ஜன வெள்ளமாய்
பரந்தாமனுக்கு
பாம்புப்படுக்கை போட்டது.
பெருமாள் இடம் மாற்றிக்கொண்டார்.
பல்லக்கில் பக்தர்கள்.
பல்லக்குத தூக்கியாய்
அந்த கள்ளழகன்
அநாயசமாய் அற்புதமாய்
ஊர்ந்து வருகின்றான்.

=========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக