புதன், 20 ஜனவரி, 2016

என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?









என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?
======================================================ருத்ரா

எத்தனை தடவை தான்
இந்தக் கம்பிகளை.
என் கண்களால் வருடுவது?
ஒரே ஒரு தடவை
அந்த கம்பிகளில்
நிலவின் பிம்பம் பிதுங்கி சிரித்தது
அப்புறம் காணவே இல்லை.
அந்த "கம்பி மத்தாப்புகளில்"
தினமும் ஒரு வெளிச்சத்தைப்பார்த்தேன்
அவள் முகம், காட்டாத
அந்த வெறுமையிலும்
தினமும் புதிது புதிதாய்
பூக்கள் தான்.
கதவுகள் சாத்தப்படும் சத்தம்
கேட்டு ஓடுவேன்.
அவள் அம்மா கதவுகளுக்கு
கொக்கி மாட்டுவது மட்டுமே
தெரிந்தது.
அந்த கொக்கியில்
அவள் எறிந்த
பொன் தூண்டில்கள்
என் மனம் தைத்ததில்
துடித்து துடித்து
வதை படுகின்றேன்.
இந்த கம்பிகளை மராமரம் ஆக்கி
அம்புவிடும்
அவள் கண்கள்
என் இருதய ஆழத்தில்
குத்திட்டு நிற்கிறது.
அந்த இரும்புக்கம்பிகளின்
வானத்தில்
ஒரு தடவையாவது
நட்சத்திரங்களின்
சாரல் தெறிக்காதா?
இன்னும்
கம்பிகள் எண்ணிக்கொண்டு தான்
இருக்கிறேன்.
அவள் எப்போது எடுப்பாள் என்னை
"ஜாமீன்"?

=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக