வெள்ளி, 29 ஜனவரி, 2016

முகம் (2)





முகம் (2)
===================================ருத்ரா இ.பரமசிவன்

அன்று அந்த முகம்
கண்ணில் பட்டு விட்டது!
துள்ளி குதித்தேன்
நான் அடைந்த ஆனந்தத்துக்கு
அளவே இல்லை!
தைரியம் அடைந்து
ஹலோ என்றேன்.
ஹலோ
ஹலோ
ஹலோ
இதற்குமேல்
முகம் எனும்
அந்த கல் எதையும்
கசிய விடவில்லையே
பூ இதழ் திறக்கும்
என்றல்லவா எண்ணினேன்.
அவள் தானா
என்று
உறுதி கொள்ள
அதே மின்னல் ஜடை
அதே நிலவின் அதே சுவடு
இவள் தான்
என்று உறுதி கொள்ள வைத்தது.
இருப்பினும்
குழப்பம் எனும் நெருப்பின்
லாவா என் மீது
பீய்ச்சி அடித்தது.
அன்று பின் தொடரும்போது
நான் ஒரு இடைவெளியில்
என் முகவேர்வையை
துடைத்துக்கொள்ளும் போது
அவள் பின்னால் திரும்பி
என் மீது "ஒரு க்ளுக்" சிரிப்பை
வீசியிருக்க வேண்டும்
அந்த பன்னீர் தெளிப்பை வைத்தே
இப்போது
முகத்தோடு முகம் நோக்கினேன்.
ஆகா!
எவ்வளவு அழகு !
அதை விவரிக்க
எனக்கு வெறும் உளுத்துப்போன
அந்த சொல் தான் கிடைத்ததா?
நிலவு என்றும்
பூ வென்றும்.
........
.......
ஹலோ மிஸ்டர்?
எதற்காக இந்த லுக்?
........
காத்திருக்கவில்லை
அவள் மேலே சென்றுவிட்டாள்.
எனக்குத்தெரியும்
அந்த சிரிப்பின் கல் எறிதல்
எவ்வளவு வட்டங்களை என்னுள்
விரித்தது?
அவளே தான் அவள்!
.....
நன்றாய் தவிக்கட்டும்
இன்னொரு முறை
முகத்தோடு முகம் நோக்க
வராமலா போவார்?
அவள் நடந்து கொண்டே இருந்தாள்.
கல கல வென்று சத்தமாக
சிரித்துக்கொண்டே நடந்தாள்.
எல்லாரும் ஒரு மாதிரியாய்
பார்த்தார்கள்.
அவனும் தான்!
இந்த தடவை குலுங்கி விழுந்த
அந்த சோழிகளில்
அவனும் இறைந்து கிடந்தான்.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக