சித்தாந்தங்கள்
______________________________________
மனிதனின் மூளை
உற்பத்தி செய்யாத
கருத்தோட்டங்களே இல்லை.
அவன் தூங்கும்போதும்
தூங்காத போதும்
குமிழியிடும் கனவுகள் எல்லாம்
அந்த கருத்தோட்டங்களே.
நம் தூங்காத நிலைக் கனவுகளே
கற்பனை என்ற சிறகு அடித்துக்கொண்டு
நம்முன் அதிர்வு எண்களை
விசிறி போல் அடித்துக்கொள்ளுகிறது.
மனிதன்
மனிதன் மற்றும் மனிதகுழுக்கள்
பற்றியும்
தூங்காத தன்மைக்கனவுகள்
காண்கிறான்.
இவை சமுதாயக்கனபரிமாணத்தை
கொண்டிருக்கும் போது
சித்தாந்தங்கள் எனப்படுகின்றன.
அதன் கிளைத்த நிகழ்வுகள்
மக்களை ஒரே கயிற்றில் கோர்க்கும்
பொது நிகழ்வுகளை
இன்னும் பொதுவான நன்மையை நோக்கி
நகரும்போது
சமுதாயக்கோட்பாடுகள் ஆகின்றன.
இவை வரலாற்றுப்படுகைகளாக
கால ஓட்டங்களில் இழைகின்றன.
திட அல்லது கெட்டிக்கனவுகளாக
நிறுவப்பட்ட பின் விதிகள் ஆகின்றன.
இயற்கை இயல்புகள் இப்படி
கெட்டியாகி நிறுவப்பட்டு
மறுபடியும் அதே நிகழ்வுகளாய்
மனிதனுக்கு பயன்படும் போது
அவை "விஞ்ஞானம்" ஆகின்றது.
அப்படிப்பட்ட ஒரு சமூக விஞ்ஞானமே
கார்ல்மார்க்ஸ் கண்ட "கம்யூனிசம்"
இவற்றோடு கடவுள் விஞ்ஞானம்
ஏன் முரண் பட வேண்டும்?
பல நூற்றாண்டுகள் மனித நல
சிந்தனையை புறந்தள்ளி
மனிதக்கனவுகள் வெறும்
அச்சம் பொய்மை உற்சாகம்
இன்னும்
மனிதனுக்கு மனிதன் வெட்டிக்கொள்ளும்
மன வக்கிரங்கள்
தனி மனித சொத்துடமை ஆசை
அதன் வெறித்தனமான ஆசை
அதன் "ஆதிக்க மனப்பான்மைக்குள்"
புகுந்த விட்ட ஆசை
இவையே அந்த சமூக விஞ்ஞானத்துக்கு
எதிரான அஞ்ஞானம் ஆகிறது.
கடவுள் சிந்தனை இன்னும்
வளப்படலாம் ,முரண் படலாம்..
முரண் படும் கடவுள் சிந்தனை
கடவுள் மறுப்பு எனும்
சித்தாந்தமாய் ஆக்கப்படுகிறது.
இது "ஒற்றை ஆதிக்க முறை"யான
மன்னர் முறையை மாற்றி விடுவதாக
அமையக்கூடாது என்பதாகத் தான்
விஞ்ஞான சிந்தனை முறை
ஈவு இரக்கமின்றி அடக்கி ஒடுக்கப்படுகிறது.
கடவுளை சிந்தனை
கனவு மயமாய் வெறும்
போதைச்சிந்தனைக்குள் அழுத்தி
வைக்கப்படுவதே இந்த
இந்த அரச இயல் கோட்பாடுகளுக்கு
உகந்ததே...
இந்த கற்பனை அல்லது கருத்து முதல் வாதம்.
பொருள் வடிவ அல்லது லௌகீக வடிவமான
சமுதாய உடன்பாடு மற்றும் முரண்பாடுகளையே
சமூக இயலின் விஞ்ஞானம் என்று கொள்வதே
"டையலக்டிகல் மெடீரியலிசம்"
உடன்படுவதா? முரண்படுவதா?
என்ற சிந்தனை இயக்க நிகழ்வே
பொருள் முதல் வாதம்.
இன்றைய இளைஞர்களிடம் சிந்தனையின்
இந்த "ஒற்றையா? ரெட்டையா?
விளையாட்டுக்கு கூப்பிட்டால்
அவர்கள் பழைய துருப்பிடித்த
உணர்வு வெறிகளை மட்டும்
ஊறுகாய்ப் போட்டுக்கொண்டிருக்கும்
"குத்தாட்ட கொண்டாட்டங்களை" மட்டும்
சித்தாந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சமுதாய சிந்தனையின் பரிமாணம் மட்டுமே
மானுட நலப்பாட்டை முன் வைத்து
இயங்க முடியும்..
இயங்க வேண்டும்...
என்ற திசை நோக்கம்
இல்லாத வரைக்கும் இங்கு
விடியல்கள்
கிழக்கு மேற்கு எனும்
உழக்குகளுக்குள் உழன்று கொண்டிருக்கும்
சொற்கூட்டங்களே
_______________________________________
சொற்கீரன்.