சனி, 28 ஜனவரி, 2023

மூளையின் நிழல்.

 



மூளையின் நிழல்.

___________________________________

ருத்ரா




சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை

பல்கலைக்கழகம் எனும்

அடிப்படைக்கட்டுமானத்தையே 

அடித்து நொறுக்கி விட்டது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள்

இந்த செல்லமான பூனைக்குட்டியை

வைத்துக்கொண்டு

புயல் கிளப்புகிறார்கள்.

உண்மை அறிவு காணாமல்

போய்விட்டது.

செயற்கை அறிவின் இந்த‌

கருவி

வெறும் மண்ணாங்கட்டியைக்கூட‌

நோபல் பரிசு 

வாங்க வைத்து விடும்.

மனிதர்களின் மூளையின் நிழலே

இனி ஆட்சி செய்யும்.

அமெரிக்க பள்ளிக்கூடங்கள்

மாணவர்கள் இந்த‌

சேட்ஜிபிடியை

பயன்படுத்த தடை 

விதித்துக்கொண்டிருக்கிறது.

கணினியுகம் க‌ண்மூடித்தன்மான‌

ஒரு யுகத்துள் விழுந்து விட்டதால்

இனி பிறக்கும் குழந்தைகளின்

கபாலங்கள் காலியாகவே

இருக்கும்

மூளைகள் இன்றி.

செயற்கை அறிவின் கதிர்வீச்சில்

இயற்கை சிந்தனைகள்

பூண்டற்றுப்போகும்.

ஒரு இறுக்கமான பனியுகம்

நம் அறிவை உறையவைத்து

இந்த உலகையே

விறைத்துப்போகவைக்கும்

பேரழிவு

நம் கைபேசி வழியே வந்து

குதிக்கப்போகிறது.

ஒரே தீர்வு

திருக்குறளை தினமும்

ஓதுவது தான்.

நம் நியூரான்களுக்குள்

கிளர்ந்து கொண்டிருக்கும் அந்த‌

டிஜிடல் சுனாமியை

எதிர் கொள்ள 

ஓ மனிதா!

மனிதம் எனும் ஆற்றலை

ஒரு எரிமலையாய்

உன்னிலிருந்து 

உமிழச்செய்.

சமுதாய உணர்வின் பிரளயம்

ஒன்றே இதைத்தடுக்கும்.

அமிழ்ந்து விடாதே

சுயநல‌ வெறியின்

இந்த அகங்காரக்கடலில்.


_________________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக