புதன், 25 ஜனவரி, 2023

அகழ்நானூறு 12

 அகழ்நானூறு 12 

___________________________________________________

சொற்கீரன்




குவிந்த குரம்பை நிமிர்காட்டி 

உயர்மனை இடிக்கும்  வான்பூச்சூடி

வேறு தனி விடியல் எற்றைத்திங்கள்

கூர்முகம் காட்டும் சொல்லா நின்று.

குவி இணர் முகத்தோடு முகம் சேர்த்து

முன்றில் நின்ற மடமஞ்ஞையின்

மயங்கிய சாயலில் முறுவல் பூத்தனள்.

பறைதரும் சான்றோன் முதுகூத்தன்

வரித்த சொல் இது உள்ளுந்தோறும்

உவகை கூட்டும் அகமும் அகவும்.

"நெடுநல் யானை நீர்நசைக்கு இட்ட‌

கை கறி"க்கும் பான்மை போன்ம்.

அணியிழை அவன்பால் அன்றொரு கங்குல் 

சேர்ந்த நினைப்பின் நீள்சரம் கடிக்கும்.

அலர்கள் கடியும் வலிக்கத்தோன்றா

ஆழிய அன்பின் அகத்தூறு இன்பு.

பனிபடு சிமைய பன்மலை அடுக்கத்தும்

புலியும் கயலும் வில்லும் பொறித்த 

நிழல் தோன்றும் தமிழின் உருகெழு

கொடியின் தோற்றிய சுடரேந்தியாய்

தெரிந்த காட்சியில் அவன் அங்கு

வீட வியன்பெரு நகை முகம் தந்தோன்

ஆறு மீண்டு அத்தம் அணித்தான்.


_______________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக