திங்கள், 30 ஜனவரி, 2023

ஆம் நண்பனே

 

ஆம்

நண்பனே !

காதல் எப்போதும் தேவை தான்.

காதலிக்கும்போது

காதலை காதலிக்க வேண்டும்.

கல்யாணத்திற்குப்பின்

கையில் கிடைத்திருக்கும்

இனிய‌

இல்லத்தை 

இல்லத்தின் பிரச்னைகளை

காதலிக்க வேண்டும்.

காதலி மட்டுமே தெரியும் 

காதலுக்கும்

பிரச்னை மட்டுமே தெரியும்

காதலுக்கும்

இடையே ஒரு

"மயிலிழை"யே காதலாய் தெரியும்

காதலைப்பற்றிய 

ஒரு காதல் உணர்வு தான்

சினிமா நிழல் காட்டும்

வெள்ளுடைகள்.

அதாவது

ஊட்டிப்பனியின் 

பஞ்சு புஷ்பங்கள்.

சரி

பையை எடுத்துக்கொண்டு

உளுத்தம் பருப்பும் 

பெல்லாரி வெங்காயமும் 

வாங்கி வர வெளியே கிளம்புங்கள்.

வெயில் படட்டும்.

பஞ்சு புஷ்பங்கள் கரைந்து விடும்.


____________________________________________

ருத்ரா

( a feedback to Thiru Sekar Krishnasamy's Face Book dt 30.01.2023)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக