செவ்வாய், 24 ஜனவரி, 2023

போவோமா புது உலகம்?!!!

 போவோமா புது உலகம்?!!!

_____________________________________________

ருத்ரா




கூப்பாடு போடுங்கள்.

ஒலி மட்டுமே கேட்கவேண்டும்

அது 

எந்த மதத்தையும் 

எந்த கடவுளையும் 

எந்த இனத்தையும் 

எந்த மொழியையும்

குறிப்பிடக்கூடாது.

அல்லது 

கூப்பிடக்கூடாது.

செய்யுங்கள்

செய்யாதீர்கள் 

என்ற கட்டளைகளும்

அங்கே இருக்கக்கூடாது.

இப்படி 

கூடாது என்றும் கூட‌

இருக்கக்கூடாது அல்லவா?

ஆம்.

அது தான் சரி.

மீண்டும் 

கோடு மீறுகிறீகள்,

என்ன?

இப்படி ஆம் என்பதும் இல்லை என்பதும்

சரியா?

சரியில்லை தான்...

என்ன?

இப்போதும் 

சரி சரியில்லை

என்ற சொல்துண்டுகள்

வந்து விழுகின்றனவே?

இது தான் "சமயம்".

இது தான் சமயமா என்று 

பாருங்கள்.

என்ன மறுபடியும்

செய்யுங்கள் என்னும் வாய்ப்பாடு

வருகிறதே.

செய் எனும் பகுதிகொண்ட‌

வினச்சொல்லோ

பெயர்ச்சொல்லோ

அல்லது வேறு

ஏதேனும் சொல்லின் விஞ்சியதை 

விகுதி என்று அழைக்கப்படும்

ஒலி வடிவோ இருக்கக்கூடாது.

முடிந்தது.

இப்போது அங்கே

பறவைகள் ஒலி யெழுப்புகின்றன.

விலங்குகள் ஒலி எழுப்புகின்றன.

காற்று ஒலிக்கிறது.

கடல்கள் மூச்சுகளை ஒலிக்கின்றன.

ஒலி கூட‌

ஒலியின் அலையற்ற ஒலியை

அதாவது 

கேளா ஒலியை எழுப்புகின்றன.

கேட்கப்படாததே கேட்கப்படவேண்டும்.

பார்க்கப்படாததே பார்க்கப்படவேண்டும்.

பேசப்படாததே பேசப்படவேண்டும்.

சிந்திக்கப்பட முடியாததே

சிந்திக்கப்படவேண்டும்.

அறிந்து கொள்ளப்பட முடியாததே

அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

மொத்தத்தில் 

செய்யப்பட முடியாததே

செய்யப்பட வேண்டும்.

வேண்டும் வேண்டாமை

என்ற இரண்டும்

எதுவுமே 

அதுவாகவோ

அது இல்லையாகவோ

இருக்க...

சட்..நிறுத்துங்கள்..

இருக்க என்பதோடேயே

இருக்க!!!!!

(வேண்டும் கூடாது என்பது

பற்றி இங்கே

பேச்சும் இல்லை மூச்சும் இல்லை)




SWITCH OFF

_______________________________________________‍





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக