ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நாடென்பது

 


நாடென்பது

______________________________________

சொற்கீரன்



நாடென்பது தமிழ் உள்விசையின் பெரும் பேர் இசை!

நாடென்பது பூவும் புள்ளும் கல்லும் முள்ளும்

நாளும் நாளும் தமிழே பேசும் நற்றிணை ஆகும்

நாடென்பது தமிழெனும் வானம் ஓலையின் வரியில்.

நாடென்பது மக்கள் யாவரும் உடன்பிறப்பென வாழல்.

நாடென்பது நாடு அன்றி நாடா பொய்மை உலகம் அன்று.

நாடென்பது நாடிகள் இசைக்கும் மக்கள் யாழே!

 நாடென்பது நால் மறை நால் நிறம் தவிர்க்கும் அறிவே!

நாடென்பதும் தமிழே என்பதும் ஒருபொருட் பன்மொழி.

நாடென்பது அகத்தின் புறத்தின் செந்தழல் தமிழே.

நாடென்பது மோசிகீரனும் கவரிவீசு மன்னனும் 

நாடிய தமிழின் நற்றமிழ்க்குரலே !

நாடென்பது இமயத்திலும் பொறித்த தமிழே தமிழே

நாடென்பது ஆடும் மாடும் செல்வம் ஆகும் 

நாடென்பது அனைவரும் இயைந்த எம் ஓருயிர் ஆகும்.

நாடென்பது உயர்குடி தாழ்குடி இன்மை ஆகும்.

நாடென்பது வேற்றுமை யற்ற தமிழ்க்குடி ஆகும்.

நாடென்பது திரித்த ஒருநூல் மந்திரம் அல்ல.

நாடென்பது நல்லோர் சான்றோர் தொகுத்த நூலே.

நாடென்பது இம்மை மறுமைக் குப்பைகள் அன்று.

.நாடென்பது பாப புண்ணிய சூழ்ச்சிகள் அன்று.

நாடென்பது எல்லோரும் இன்புற்றிருப்பதே அன்றி

வேறு பராபரம் ஏதும் அற்ற 

சமநீதி சமநீதி ஒன்றே ஆகும்.


-________________________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக