ஞாயிறு, 1 மே, 2022

பீலி பெய் நடு கல்

 

 பீலி பெய் நடு கல்

_____________________________________________சொற்கீரன்


மண்காத்து தன் உயிர் நீத்தவர்

பீலிபெய் நடுகல் கண் வரிய தந்தவை

பேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறுமோ?

மறை மொழி மிழற்றும் வெறுமையின் ஓதை.

பிறப்பும் இறப்பும் அடுக்கியது  ஊழே.

இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம்

சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார்

கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌

பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்கு

உள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே.


____________________________________‍‍‍‍‍‍‍‍‍______


01.05.22 அன்று பகல் 2.40 மணியில்

நான் எழுதிய சங்கநடைச் செய்யுட்கவிதை இது.


விளக்க உரை

_____________________________________________சொற்கீரன்


தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி

மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் வரிகள்

வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளைக் கூறுமோ?

மந்திரச்சொற்களின் ஓசைகள் வெற்று ஒலிகளே ஆகும். 

பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் வருவதே விதி என்பர்.

இப்போது நம்மிடம் இருக்கும் நடப்பு வாழ்க்கை பற்றி 

சுள்ளென்று அந்த சூரியன் சூடு காட்டி சொல்லிச்செல்லும் 

உண்மையை உணராதவர்கள் ஒரு அச்சத்தில் தோய்ந்து கிடப்பார்கள்.

சுனையின் நடுவே நீரின் நிழலை பனை நுங்கின் கண்ணீர் 

என மயங்கி வாடுபவர் போல் வெறும் புனைகதைகளின் 

பால் பட்டு கலங்கித்துன்புறுவர்.

________________________________________சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக