சனி, 21 மே, 2022

புளித்த ஏப்பம்

 புளித்த ஏப்பம் 


-----------------------------------------‍‍‍‍

ருத்ரா




தூணிலும் இருப்பான்


துரும்பிலும் இருப்பான்


எதில் இருக்கவேண்டுமோ


அதில் இருக்க மாட்டான்.




அவனன்றி ஓரணுவும் அசையாது


அசைகின்ற அணுவிலோ


அவன்


இல்லவே இல்லை.




ஆயிரம் ஆண்டுகளாய்


மார் தட்டிக்கொள்கிறோம்


"தமஸோ மாம் ஜ்யோதிர் கமய"


ஆனால்


மின்சாரம் மிலேச்சன் தான் 


கண்டுபிடித்தான்.




புளி போட்டு புளி போட்டு


விளக்கி


பளிச்சென்று ஆக்கியதாய்


அதே பொய்மையை 


பெருமை பேசினான்


"ஆத்மீகம்" என்று.





"பெல்  ஷேப்பெடு நார்மல்  கர்வ்"


என்று 


மேலை நாட்டான்


"ப்ராபபிலிட்டி"யை 


படம் வரைந்தான்.


நாம் அதை லிங்கம் என்று 


குங்குமம் வைத்தோம் .


இன்றும் 


அதன் கும்பமேளாவில் 


கங்கைகளையெல்லாம் 


சாக்கடையாக்கிக்கொண்டிருக்கிறோம்.



புத்தி கெட்ட பயல்களா!


அரசியல் சட்டம் எழுத பேனா


எதற்கு?


மாற்று மத வழிபாட்டுக் 


கட்டிடங்களை 


இடித்து நொறுக்கும் இந்த‌


கடப்பாரைகளே போதும்.




--------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக