வியாழன், 5 மே, 2022

பல்லக்குகள்

 


பல்லக்குகள்


_____________________________ருத்ரா




மனிதன் மீது மனிதன் 


பச்சைக்குதிரை ஏறி விளையாடும்


விளையாட்டு தானே இது


என்று


பக்தி ரசம் காட்டும்


இந்த கூட்டங்கள்


மனிதர்களுக்குள் மனிதர்கள்


இப்படி "பிழைப்பு வாதம்"


கொள்ளும் மரபு உடைந்தால்


"எங்கள் மனம் புண்படும்"


என்று கூச்சல் போடும்


ஒரு கீறல் விழுந்த ரிக்கார்டு 


வைத்திருக்கிறார்கள்.


மனித உரிமையின் முதுகெலும்பை


முறித்துப்போட்டு விட்டு


இந்த பாசாங்கு காட்டும் தந்திரத்தில்


நீதி மன்றத்துத் தராசுகளைக்கூட‌


தங்கள் விரல்பிடிக்குள் பிடித்து


வைத்திருக்கிறார்கள்.


ஆயிரம் ஆண்டுகளாய் 


இந்த அடிமை வாதத்தில் ஏறி 


பயணம் செய்யும் 


இந்த ஆதிக்க வெறியினால்


வீழ்ந்து கிடக்கும்


தமிழே!தமிழ் உணர்வே!


இது வெறும் பல்லக்கு விளையாட்டு 


இல்லையடா தமிழா!


வேத ஒலிகளின் எச்சில்களுக்குள்


தமிழ்


விலங்கு பூட்டிக்கிடக்கவேண்டும்


என்ற சூழ்ச்சிதானடா இது!


தமிழ் என்றால்

 

அமுது என்ற பெயர் மட்டும்


இல்லையடா! தமிழா!


மனிதம் என்பதன் "ஓர்மையும்"


தமிழ் தானடா!


உன் அந்த உணர்வு மரத்துப்போனதால்


மந்திரக்காடுகளில் 


நீ சிக்கிக்கிடக்கிறாய்.


உன் "மரப்பு"களின் நோயை வைத்து


"மரபு" விளையாட்டு விளையாடும்


இந்த குள்ளநரிகளை 


நீ விரட்டியடிப்பதே


உன் இன்றைய "புற நானூற்றுத்தமிழ்"


என்று


புரிந்து கொள்ளடா தமிழா!


சைவத்தை வைணவமும் 


வைணவத்தை சைவமும்


பல்லக்குத்தூக்கிக்கொள்ளட்டும்.


உன் அறிவும் ஆற்றலும்


உனை உயர்த்திச்செல்லும் 


பயணம் தொடரடா! தமிழா!


பயணம் இன்றே தொடர்!


_________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக