புதன், 4 மே, 2022

ஒரு "சொல்"ஹைக்கூ.

 


ஒரு முழுத்திரைப்படத்தை 

ஒரு ஹைக்கூ ஆக எடுத்திருக்கிறார்.

அதற்கும் மூன்று வரிகள் தேவை.

இது ஒரு புதுமையான‌

ஒரு "சொல்"ஹைக்கூ.

அது எப்படி?

இரவின் நிழல் 

என்பது இரு சொல் அல்லவா

என்கிறீர்களா?

இரவு என்பதும் நிழல்

நிழல் என்பதும் இரவு.

மனிதம் என்ற ஒரு சொல்லில் 

மொத்தப்பிரபஞ்சத்தின்

"முட்டிக்கொண்டு நிற்கின்ற"

உயிர்த்துளி அல்லது 

ஒளி எனும் இருட்துளியாக‌

ஒரு புது இலக்கணத்தை இலக்கியமாய்

சொல்லலாம்.

அப்படி ஒரு

"ஒரு பொருட்பன்மொழி" இலக்கணத்தை

திரையில் புதுமையாக எழுதியிருக்கும்

"தொல்காப்பியன்" இந்த பார்த்திபன்

என்ற ஒரு சாதனையை 

கையில் வைத்துக்கொண்டு 

முறுவலித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் வெற்றிக்கு 

நம் பாராட்டுகள்!

______________________________கவிஞர் ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக