சனி, 5 ஜூன், 2021

புதிய ராமானுஜன்கள்

 புதிய ராமானுஜன்கள் 

__________________________________ருத்ரா



அறிவியலின் 

ஒரு முட்டுச்சந்துக்கு

வந்து விட்டோமோ?

கணினியில்

புதிய புதிய உயரங்கள்

கண்டு கொண்டிருக்கிறோம்.

குவாண்டம் கணினியில்

கணிதத்தின் நுட்பத்தை

வைத்து

பல் அடுக்கு ரோஜாபூவைபோல்

ஒரு பிரபஞ்சமே 

நாம் உருவாக்கி விடலாம்.

நாம் தீபாவளிக்கு 

வெடிக்கும் ஒரு

லெட்சுமி வெடி போல்

அந்த பிக் பேஞ்க் எனும்

பெருவெடிப்பை 

கற்பனை செய்யுங்கள்.

காலமும் வெளியும் வெறும்

சூன்யமாகும் ஒற்றைப்புள்ளியை

கணித வல்லுனர்கள்

சிங்குலேரிடி என்கிறார்கள்.

நம் பிரபஞ்சத்தின்

முன் வாசலும் 

புழக்கடையும்

இந்த ஒற்றைப்புள்ளி தான்,

நம் செல்களில்

இந்த வைரஸ்கள்

என்ன பாடு படுத்துகின்றன?

இப்படியே 

மனிதனையும் 

நேனோக்களில்

(ஒரு புள்ளியை பல கோடி மடங்கு

சிறிதாக்கிய வடிவம்)

உலவ விட முடியுமா?

என்று

செயற்கை அறிவு விஞ்ஞானிகள்

எனும் அந்த‌

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்காரர்கள்

மூளையை கசக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்புறம் என்ன?

பிறப்பும் இறப்பும் 

நம் கணித சூத்திரம் தான்.

பல கோடி மைல்கள் இருக்கும்

ஒளிமண்டலத்துக்கு கூட‌

ஒரு வாக் போய் விட்டு வந்து விடலாம்.

அதெல்லாம் சரி தான்

நண்பர் என் காதில் கிசு கிசுக்கிறார்.

சரி 

செய்துவிட்டால் போயிற்று.

என்ன? என்ன? என்ன?

என்கிறீர்களா?

அங்கே ப்ரதோஷத்துக்குப் போக‌

ஒரு கோயில் இருக்கவேண்டும்

என்கிறார்.

உங்களுக்குத்தெரியுமா?

நம் கணித மேதை ராமானுஜம்

கிட்டத்தட்ட‌

ஒரு நானூறு ஐநூறு

மிக மிக நுட்பம் வாய்ந்த‌

கணிதத் தேற்றங்களை

நோட்டுப்புத்தகங்களில்

நிரூபணங்களே இல்லாமல்

எழுதி வைத்து இருக்கிறார்.

அவை இன்றளவும்

மிக மிகப்புதிதான 

தேற்றங்களாகத்தான்

இருக்கின்றன.

நிரூபணங்கள் இன்னும் 

அறியப்பட வில்லை.

இவ்வளவும் 

நாமக்கல் கோயில் தெய்வம்

அவர் கனவில் வந்து

சொல்லியதாகத்தான்

குறிப்பிட்டிருக்கிறார்.

பாருங்கள் 

மனிதனின் செயற்கை அறிவு

அந்த மூளை மடிப்புகளில்

கனவுகளுக்கு காரணமான

நியூரான்களில் 

பல்கலைக்கழகம் கட்டி வைத்துக்கொண்டு

காத்திருக்கிறது.

புதிய ராமானுஜன்கள்

ஏதாவது

வைரஸ் ம்யூட்டேஷன்களில் 

அவதரிக்க வாய்ப்புண்டோ?

ராமானுஜம் சமன்பாடுகளின்

கருவறைக்குள்

"மாடுலர் ஃபன்க்ஷன்ஸ்"எனும்

அதி நுண் கணிதம் ஒன்று உண்டு.

அதுவே

நம் அதி நவீன "அதிர்விழைய"கோட்பாட்டின்

அதாவது "ஸ்ட்ரிங் தியரி"யின்

கரு மூலம் என்கிறார்கள்.

மனிதன் உண்டாக்குவது

மனிதனையா?

கடவுளையா?

பொறுத்திருப்போம்

புதிய ராமானுஜன்கள் 

வந்து விடட்டும்!


____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக