திங்கள், 7 ஜூன், 2021

கடல் கோள்

 


கடல் கோள்

_________________________________ருத்ரா


இதோ இன்னும்

சிறிது நேரத்தில் அவன்

இங்கு வந்து விடுவான்.

அது வரை

இந்த இனிய இரவில்

மொட்டை மாடியில்

கூடை நாற்காலியில்

உட்கார்ந்து

அந்த விண்மீன்களை

எண்ணிக்கொண்டிருக்கலாம்

என்று

எண்ணிக்கொண்டிருந்தேன்.

கழுத்து வலிக்க வலிக்க‌

எண்ணிக்கொண்டிருந்தேன்.

விண்மீன்கள் ஒன்றையும் காணோம்.

கிழக்கில் சூரியன் சிரித்தான்.

என்னை முட்டாளாக்கி விட்டான்.

சினம் பொங்க‌

சூரியனைச் சபித்தேன்.

போதும் போதும்

நீ

இவர்களுக்கு வெளிச்சம் காட்டியது.

இந்த இருட்டுப்பிண்டங்கள்

இப்படியே இருக்கட்டும்.

தெரிய வில்லை.

எத்தனை யுகங்கள் கடந்தன என்று.

எல்லாமே கருப்பு.

வர்ணங்கள் எல்லாம் இறந்து போயின.

சூன்யமே

நீர்ப்பிழம்பாய்

சுழல்களாய் வந்தது.

அப்போதும்

அவனைத் தொட்டுவிட‌

என் மீது அவனும்

அவன் மீது நானும்

வீசிய புன்முறுவல்கள்

மில்லியன் ஒளியாண்டுகள் நீளத்துக்கு

"ஹிக்ஸ் போசானின்" ஃபீல்டாய் 

என் கைகளை நீட்டினேன்.

இளங்கோ அடிகள் ஓலையில்

கீறித்தள்ளினார்..

பன்மலை அடுக்கங்களையெல்லாம்

மக்களையெல்லாம்

அந்த மாட மாளிகைகளையெல்லாம்

விழுங்கித்தீர்த்தன‌

இந்த கடல் கோள் என்று.

அப்போதும்

விழுங்கமுடியாததாய்

அவனும் நானும்....


______________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக