ஞாயிறு, 20 ஜூன், 2021

அந்த நீரிலும் தகித்தது.


 

அந்த நீரிலும் தகித்தது.
_________________________________ருத்ரா


சின்ன சின்ன ஆசையிலும்
சின்ன சின்ன ஆசை தான்.
இதோ
இங்கே அருகில் இருக்கிற‌
பாபநாசம் தாமிரவர்ணியின்
அகத்தியன் அருவியில்
நனைய..
அல்ல அல்ல 
நனைந்து கொண்டே இருக்க ஆசை.
மூக்கு நுனியிலும்
கண் புருவங்களிலும்
வாயின் உள்ளும்
நாக்கின் சுவையிலும்
இதழோரங்களிலும்
வைரத்திவலைகளாய் 
கிச்சு கிச்சு மூட்ட‌
பொதிகையின்
அந்த பச்சைப்பளிங்கு ரத்தத்தில்
தோய்ந்து கரைய ஆசை.
கொரோனா முந்திக்கொண்டது.
அதன் குளியல் கும்மாளம் தான்
இங்கும் கேட்கிறது.
அங்கும் கேட்கிறது.
எங்கும் கேட்கிறது.
வெறும் வைரஸ் எனும் 
எண்குறிப்புகளின்
சங்கிலிச்சலசலப்புகளா
நம் உயிருக்குள்
குடைந்து குடைந்து குளிக்கிறது.
முகம் முழுதும் மூடி
அந்த மௌனத்தில் குளிக்கும் முன்
இந்த அமுத இரைச்சல்களின்
நீர்ச்சலங்கைகளில்
என் வயதுகள் அத்தனையும் 
ஒன்று விடாமல் 
குஞ்சம் கட்டிக்கொண்டு
ஜெண்டை வரிசைகளையும்
மேளகர்த்தாக்கள் எனும் 
அந்த நாணற்கூட்டங்களிடையே
வெள்ளைப்புருசு போன்ற 
அதன் பூக்கள் ஒவ்வொன்றும்
வெண்சிட்டுகளின் நுனிச்சிறகுத்
துடிப்புகளாய் வருடிவிடும்
அருவித்தோயல்களில்....
............
"கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்"
என்னைப்போலவே 
இன்னொரு தொப்பை
இளஞ்சிவப்புக்குற்றால‌த்துண்டை
தொப்புள் விளிம்பில்
சுற்றிக்கொண்டு
முண்டியடித்துக்கொண்டு 
வந்தது.
அந்த பாறைகளில் எல்லாம்
இருந்த‌
இனிப்பின் மின்காந்தம்
அந்த மாய "ஹிக்ஸ் போஸான்"களாய்
என் நரம்பின் "யாழ்ப்பாணத்தில்"
அடங்கா நெருப்பு தாகமாய்
அந்த நீரிலும்
இனிமையாய் தகித்தது.

__________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக