செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

வா



வா
========================================ருத்ரா

கண்ணாடிச்சிறகுகள்
கொண்டு
விர்ரென்று காதருகே ஒலித்து
விளையாடும் தட்டாம்பூச்சியின்
த‌ருணங்கள் போல்
செவியோரம் அலைகள்
ஆர்ப்பரிக்க‌
ஏன் இப்படி ஆர்ப்பாட்டம்
நடத்துகிறாய்?
கொடி போன்றவளே
கொடியேந்தி போராடும்
உன் கோரிக்கை தான்
என் கோரிக்கையும்.
என்ன செய்வது?
தனிமைக்குள்
தலைகள் நுழைக்கும்
நெருப்புக்கோழியைப்போல‌
இந்த இரைச்சல் காடுகளுக்குள்
ஒரு பதுங்கு குழி கண்டுபிடியேன்.
நம் இதயங்கள் கலக்கும்
ஒலியைத்தவிர‌
வேறு ஒன்றும் கேளாதவாறு
அடைந்து கிடப்போம்..வா.
தனி உலகம் தேடுவோம் வா.

===========================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக