ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

கவிதைகளும் காதலித்தன

கவிதைகளும் காதலித்தன
==========================================ருத்ரா



காளிதாசன் என்ற நினைப்பில்

மேகத்துக்குப்பதில்

அவள் நெஞ்சத்தையே அவளுக்கு

தூது அனுப்பினேன்.

அந்தக் கவிதை அழகில்

சொக்கிப்போய்

என்னை மறந்தே போய்விட்டாள்.

காலங்கள் ஓடின.

தூது அனுப்பினேனே

உன் பதில் கிடைக்கவில்லையே

என்று

செல்லில் "மெஸ்ஸேஜி"னேன்.

அவள் கடுந்தமிழில்

குறுஞ்செய்தியிட்டாள்.



"என் நெஞ்சை ஏற்கனவே

உனக்கு அனுப்பியிருந்தேன்.

அதை அழகிய கவிதையாக்கி

எனக்கே திருப்பி அனுப்பி விட்டாயே!

என் நெஞ்சையும் அக்கவிதையையும்

பிரிக்க முடியவில்லை.

போதும் உன் காதல்.

உன்னைவிட உன் கவிதையையே

காதலிக்கிறேன்."



கவுத்து  விட்டாயே!

காளிதாசா!


=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக