புதன், 7 ஆகஸ்ட், 2019

இது கவிதை அல்ல.




இது கவிதை அல்ல.
===============================================ருத்ரா

நீலவானம்
பளிங்கு போன்று
தெள்ளிய மௌனத்தை
மலை முகடுகளில்
பதித்து நிற்கிறது.
பச்சைப்புல் விரிப்பு
அதை தழுவி
நிரவல் செய்கிறது.
ஓ! மனிதா
கோபத்தில் கொப்பளித்து
நிற்கும் நீ
இங்கு வந்தால்
உன் நரம்பு புடைப்புகள்
சமனம் ஆகி விடும்.
சீறும்
அந்த சிவப்பு லாவா
அமைதியின்
பச்சை லாவா ஆகிவிடும்.
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து
இதை சில வினாடிகள்
உற்று நோக்கி இருக்கிறேன்.
அமெரிக்காவின் கலிஃ போர்னியாவில்
லாஸ் ஏ ஞ்சல்ஸில்
ஓக் பார்க் என்ற நகரத்தின்
பூங்கா இது.

அப்போது
என் உள்ளம் பொங்கி
அருவி ஆனது.
தனிமையின் அந்த பசுமை
எனும் புல்லரிப்பு
சிந்தனை இடுக்குகளில்
"கிம்பர்லிகளாய் "
சுடர்கின்றன .
..

அழகின் துடிப்பு இது.
எழுத்திலும் காகிதத்திலும்
இதை பொட்டலம்
கட்டிவிடமுடியாது.
கவிதை என்று தலைப்பு இட்டால்
அந்த நீலவானமும் பச்சைப்புல்லும்
கோபித்துக்கொள்ளும்.
இப்படி
கொச்சைப்படுத்த
நாங்கள் தான் கிடைத்தோமா? என்று.

===============================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக