வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சொர்க்கம் பக்கத்தில்...

சொர்க்கம் பக்கத்தில்...
=====================================ருத்ரா

கடவுள் தாவி தாவி
ம‌ரக்கிளைக்கு வந்தார் குரங்காக.
இங்கிருந்து
தரைக்கு தாவினார்
மனிதனாக.
மனிதனாய் வானத்தின்
உச்சிக்கே தாவி
கடவுள் ஆகி  விட்டால்
அதுவே
முழுப்பரிமாணம்.
ஆனால் குரங்கின் மனிதங்களும்
மனிதனின் குரங்கு மிச்சங்களும்
பட்டி மன்றம் தொடங்கியிருக்கின்றன.
கடவுள்
குரங்கா? மனிதனா?
அதற்கு முன் இதற்கு
நடுவராக யாரை உட்காரவைப்பது?
கடவுளா?
குரங்கா?
மனிதனா?
இரண்டல்ல ஒன்று
என்று சொன்னால் அது
அத்வைதம்.
மூன்றல்ல ஒன்று
என்று சொன்னால் அது
முத்வைதம்.
இது குறும்புக்காக சொன்னது.
சுத்தமாக சொன்னால்
இது "அத்ரையம்".
சங்கரரைக்கேட்டால்
"கோவிந்தனைப்பாடு
கோவிந்தனைப்பாடு
ஓ முட்டாளே"
என்று தான் துவங்குவார்.
சரி.
நமக்கேன் வம்பு.
நாமும் அந்த‌
முட்டாள்களின் சொர்க்கத்தில்
போய் உட்கார்ந்துகொண்டு
கோவிந்தனைப் பாடுவோம்.

====================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக