செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

அவர் நினைவை போற்றுவோமாக‌

அவர் நினைவை போற்றுவோமாக‌
===================================================ருத்ரா


பெருமதிப்பிற்குரிய
சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்
காலமான செய்தி
மிகவும் அதிர்ச்சியை தருகிறது.
உலக நாடுகள் தோறும்
வலம் வரும்போது
நெற்றி நிறைய திலகம் இட்டு
இந்திய நாடு
உலகத்துக்கு ஒரு திலகம் போன்றது
என்ற கருத்தின் உருவகமாய்
கண்ணியம் காத்த தலவர் அவர்.
உலகத்தில் இந்தியர்களுக்கு
ஏதாவது பிரச்னை என்றால்
உடனடியாய் தீர்த்து வைப்பதில்
அவர் காட்டும் வேகமும் அக்க்கறையும்
நம்மால் மறக்க இயலாது.
பெண்ணினத்தின் கண்ணியம் மிக்க‌
அந்த ஆளுமை
மறைந்து போனது
நமக்கு பெரும் இழப்பு.
அவர் நினைவை போற்றுவோமாக!

=============================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக